Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

15 ஆடுகள்.. 50 கோழி.. "அறிவாலயத்தின்" மூக்கை துளைத்த கமகம கறி விருந்து.. யாரிந்த சிவகங்கை பெண்? ஓஹோ

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: சிவகங்கையில் நடத்தப்பட்டிருக்கும் கறிவிருந்தானது, ஒட்டுமொத்த திமுகவினரின் கவனத்தை பெற்று வருகிறது.. இது தொடர்பான வீடியோக்கள்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன. யாரிந்த பெண்?

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டுமென திமுக நிர்வாகிகள் பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். அதேபோல, அமைச்சரவை மாற்றம் செய்யப்படும்போது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுவதாக செய்திகளும் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.

Sivaganga DMK

ராஜகண்ணப்பன்: தமிழக அமைச்சர்களும், இந்த தகவலை இதுவரை மறுக்காமல் உள்ளனர்.. உதயநிதி துணை முதல்வராவது குறித்த கேள்விக்கு, மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, பொன்முடி உட்பட பெரும்பாலான அமைச்சர்களும் பச்சைக்கொடியை காட்டியே தங்கள் பதிலை வழங்கியிருந்தனர். வரும் 19ஆம் தேதி உதயநிதி துணை முதலமைச்சர் ஆகப்போகிறார் என பகிரங்கமாகவே போட்டுடைத்தார் அமைச்சர் ராஜகண்ணப்பன்..

கடந்த 5-ம் தேதி கொளத்தூரில் நடந்த முதல்வர் ஸ்டாலினின் ஆய்வு நிகழ்ச்சியின்போது, "விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறதே?" என்று செய்தியாளர்கள் கேட்டார்கள்.. அதற்கு முதல்வர் ஸ்டாலின், "கோரிக்கை வலுக்கிறது.. ஆனால் பழுக்கவில்லை" என்று பதிலளித்திருந்தார்.. துணை முதலமைச்சராக போவதாக சொல்லப்படுவது வதந்திதான் என்று அமைச்சர் உதயநிதியும் ஒருமுறை கூறியிருந்தார்.

தொண்டர்கள்: எனினும், திமுக தலைவர்களும், நிர்வாகிகளும் விடுவதாக இல்லை.. அதிலும் தொண்டர்கள் ஒருபடிமேலே போய்விட்டார்கள்.. உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்த துவங்கியிருக்கிறார்கள். இதில் ஒரு பெண், உதயநிதி துணை முதல்வராக வேண்டுமென்று கிடாய்களை வெட்டி விருந்து வைத்து, வழிபாடே செய்திருக்கிறார்.

சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி சாத்தையா.. இவர் இளையான்குடி திமுக ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக உள்ளார்.. அந்த பகுதியிலுள்ள அய்யம்பட்டி கலுங்கு முனீஸ்வரர் கோயிலில் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று கறிவிருந்து படைத்துள்ளார்.

கறிவிருந்து: இதற்காக 15க்கும் மேற்பட்ட கிடாய்கள், 50க்கும் மேற்பட்ட கோழிகளை பலியிட்டு, கமகம அசைவ உணவு தயாரிக்கப்பட்டது.. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு ஆட்டுக்கறி, கோழிக்கறி, குடல் கறி, தலைக்கறி முட்டை, என பல்வேறு வகையான உணவுகளுடன் கறி விருந்து வைத்துள்ளார்..

அத்துடன், தங்களது சாலைகிராமம் மற்றும் இளையான்குடி சுற்று வட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் குடும்பத்தோடு கலுங்கு முனீஸ்வரர் கோயிலில் வழிபாடும் நடத்தியுள்ளார். இந்த கறிவிருந்தில் இளையான்குடி, சாலைகிராமம், அய்யம்பட்டி சுற்றுவட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திமுக பெண் ஒன்றிய கவுன்சிலர் நடத்தியிருக்கும் இந்த கறிவிருந்துதான், திமுகவினரின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+