கப்பலேறிய சில்மிஷ தாத்தாவின் மானம்.. 70 வயசுல அதுவும் கோயிலுக்குள்.. இப்ப 178 வருஷம் ஜெயிலுதான்
சிவகங்கை: சிவகங்கையின் ஆன்மீக தலத்தில் தஞ்சம் புகுந்த பிஞ்சுயிர்களை சிதைத்த முதியவர் ஒருவருக்கு, மரணம் வரை சிறையிலேயே இருக்கும் வகையில் 178 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது... என்ன நடந்தது? யாரிந்த சில்மிஷ தாத்தா?
சிவகங்கை அருகே உள்ள சோழபுரம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி.. 70 வயதான இவர், அந்தப் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் பூசாரியாக பணியாற்றி வந்தார்.

கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ம் தேதி கோயிலுக்கு வந்த 9 வயது சிறுமி, 10 வயது சிறுவன் மற்றும் 12 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் இந்த தாத்தா பெரியசாமி வழிமறித்துள்ளார்..
சிவகங்கை தாத்தா
தெய்வ சந்நிதி என்றும் பாராமல் அந்த 3 குழந்தைகளுக்கும் பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்துள்ளார்.. மேலும் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரமும் செய்துள்ளார்.. இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணையைத் தொடங்கினர்..
குழந்தைகள் நலக்குழுவினரும் இதில் தலையிட்டு புகார் அளித்தனர்.. அதனைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் பூசாரி பெரியசாமியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி கோகுல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.. விசாரணையின் போது பூசாரி என்ற மதிப்பிற்குரிய இடத்தில் இருந்து கொண்டு குழந்தைகளை மிரட்டி காயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது.
கோயில் பூசாரி
இதனையடுத்து நீதிபதி வழங்கிய தீர்ப்பில் தண்டனைகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
சிறுவர்களை காயப்படுத்தியதற்காக 2 ஆண்டு சிறை மற்றும் 500 ரூபாய் அபராதமும் கொலை மிரட்டல் விடுத்ததற்காக 4 ஆண்டு சிறை மற்றும் 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.. மேலும் குழந்தைகளை மிரட்டியதற்காக 2 ஆண்டு சிறை மற்றும் 500 ரூபாய் அபராதமும் அந்தச் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 60 ஆண்டு சிறை மற்றும் 2000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது..
மற்றொரு பாலியல் குற்றத்திற்காக 20 ஆண்டு சிறை மற்றும் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் முக்கியமாக கோயில் பூசாரி என்ற பொறுப்பான இடத்தில் இருந்து கொண்டு 3 குழந்தைகளுக்கும் இழைத்த கொடுமைக்காக 90 ஆண்டு சிறை மற்றும் 3000 ரூபாய் அபராதம் எனத் தனித்தனியாக தண்டனைகள் அறிவிக்கப்பட்டன.
178 வருடம் ஜெயில் தண்டனை
ஆக, ஒட்டுமொத்தமாகப் பெரியசாமிக்கு 178 ஆண்டுகள் சிறை தண்டனையும் 8000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.. 70 வயதான இந்த முதியவர் தனது வாழ்நாளின் எஞ்சிய காலத்தை முழுமையாகச் சிறையிலேயே கழிக்கும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது..
குற்றவாளிக்குத் தண்டனை வழங்கியதோடு மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அரசு தரப்பில் தலா 5 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 15 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி கோகுல்முருகன் தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் போக்சோ வழக்குகளில் வழங்கப்பட்ட மிகக் கடுமையான தண்டனைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.. இதில் 2 சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமியைப் பலாத்காரம் செய்ததற்காக இந்த 178 ஆண்டு சிறை தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டும்.. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உரிய நீதி கிடைத்துள்ளதாகப் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications