காரைக்குடி மாநகராட்சி ஆபீஸில் பெண் ஊழியர் ஆவேசம்.. கையில் என்ன அது.. அதிர்ந்த ஊழியர்கள்
சிவகங்கை: காரைக்குடி மாநகராட்சியில் காசாளராக வேலை பார்த்து வருபவர் ஷர்மிளா பர்வீன். நேற்று வரிவசூல் குறித்த கூட்டம் காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் முன்னிலையில் நடந்தது.. அப்போது ஷர்மிளா பர்வீன் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தாமதமாக வந்தவர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசம் அடைந்த மாநகராட்சி ஊழியர் கையை கத்தியால் கிழித்துக்கொண்டதுடன், அதிக பணிச்சுமை என கூறி போராடியதால் பரபப்பு ஏற்பட்டது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியில் காசாளராக 32 வயதாகும் ஷர்மிளா பர்வீன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருடைய கணவர் ராஜ்கபூர் என்பவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இந்த நிலையில் காரைக்குடி மாநகராட்சியில் வரிவசூல் குறித்த கூட்டம் நேற்று காலை ஆணையாளர் முன்னிலையில் நடந்துள்ளது.

அந்த மாநகராட்சி கூட்டத்திற்கு ஷர்மிளா பர்வீன் தாமதமாக வந்ததாக சொல்லப்படுகிறது. இதனிடையே தாமதமாக வந்தவர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யும்படி மாநகராட்சி உயர் அதிகாரிகள் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த ஷர்மிளா பர்வீன், ஊருக்கு வந்திருந்த தன் கணவரை மாநகராட்சி அலுவலகத்துக்கு வரவழைத்துள்ளார்.
இருவரும் காரைக்குடி மாநகராட்சி ஆணையாளரின் அறைக்கு சென்றுள்ளனர். தனக்கு அதிக பணிச்சுமை உள்ளதாக கூறி ஷர்மிளா பர்வீன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம்.. பின்னர் காரைக்குடி மாநகராட்சி மெயின் கேட் பகுதிக்கு வந்த அவர், தான் வைத்திருந்த சிறிய கத்தியால் தனது கையை கிழித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதைபார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக ஷர்மிளா பர்வீனை தடுத்து நிறுத்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றார்கள்.
இதற்கிடையே காரைக்குடி மாநகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார், காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்தார். மேலும் காரைக்குடி மாநகராட்சியின் நிதி ஆதாரத்தை வலுப்படுத்த வேண்டியது எனது கடமை மட்டுமின்றி, அரசின் உத்தரவு என்றும் கூறினார்.
இது ஒருபுறம் எனில், சாப்ட்வேர் என்ஜினியர் ராஜ்கபூர், தன்னுடைய மனைவி ஷர்மிளா பர்வீனுக்கு அதிக பணிச்சுமையை ஏற்படுத்தி, மனஉளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்கு தூண்டிய மாநகராட்சி அதிகாரிகள் மீது குற்றம்சாட்டியதுடன், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் அளித்தார். இந்த இரண்டு புகார்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் மாநகராட்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications