Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காரைக்குடி மாநகராட்சி ஆபீஸில் பெண் ஊழியர் ஆவேசம்.. கையில் என்ன அது.. அதிர்ந்த ஊழியர்கள்

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: காரைக்குடி மாநகராட்சியில் காசாளராக வேலை பார்த்து வருபவர் ஷர்மிளா பர்வீன். நேற்று வரிவசூல் குறித்த கூட்டம் காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் முன்னிலையில் நடந்தது.. அப்போது ஷர்மிளா பர்வீன் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தாமதமாக வந்தவர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசம் அடைந்த மாநகராட்சி ஊழியர் கையை கத்தியால் கிழித்துக்கொண்டதுடன், அதிக பணிச்சுமை என கூறி போராடியதால் பரபப்பு ஏற்பட்டது

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியில் காசாளராக 32 வயதாகும் ஷர்மிளா பர்வீன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருடைய கணவர் ராஜ்கபூர் என்பவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இந்த நிலையில் காரைக்குடி மாநகராட்சியில் வரிவசூல் குறித்த கூட்டம் நேற்று காலை ஆணையாளர் முன்னிலையில் நடந்துள்ளது.

Sivagangai Karaikudi Corporation

அந்த மாநகராட்சி கூட்டத்திற்கு ஷர்மிளா பர்வீன் தாமதமாக வந்ததாக சொல்லப்படுகிறது. இதனிடையே தாமதமாக வந்தவர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யும்படி மாநகராட்சி உயர் அதிகாரிகள் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த ஷர்மிளா பர்வீன், ஊருக்கு வந்திருந்த தன் கணவரை மாநகராட்சி அலுவலகத்துக்கு வரவழைத்துள்ளார்.

இருவரும் காரைக்குடி மாநகராட்சி ஆணையாளரின் அறைக்கு சென்றுள்ளனர். தனக்கு அதிக பணிச்சுமை உள்ளதாக கூறி ஷர்மிளா பர்வீன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம்.. பின்னர் காரைக்குடி மாநகராட்சி மெயின் கேட் பகுதிக்கு வந்த அவர், தான் வைத்திருந்த சிறிய கத்தியால் தனது கையை கிழித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதைபார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக ஷர்மிளா பர்வீனை தடுத்து நிறுத்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றார்கள்.

இதற்கிடையே காரைக்குடி மாநகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார், காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்தார். மேலும் காரைக்குடி மாநகராட்சியின் நிதி ஆதாரத்தை வலுப்படுத்த வேண்டியது எனது கடமை மட்டுமின்றி, அரசின் உத்தரவு என்றும் கூறினார்.

இது ஒருபுறம் எனில், சாப்ட்வேர் என்ஜினியர் ராஜ்கபூர், தன்னுடைய மனைவி ஷர்மிளா பர்வீனுக்கு அதிக பணிச்சுமையை ஏற்படுத்தி, மனஉளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்கு தூண்டிய மாநகராட்சி அதிகாரிகள் மீது குற்றம்சாட்டியதுடன், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் அளித்தார். இந்த இரண்டு புகார்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் மாநகராட்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+