சிஎஸ்கே அணி இப்போ ரெடி.. பிரெவிஸ், தோனி கம்பேக் லோடிங்.. இனி 2 விஷயங்கள் மாறப்போகுது!
சென்னை: சென்னை அணிக்காக அடுத்தப் போட்டியில் டிவால்ட் பிரெவிஸ் மற்றும் தோனி ஆகிய இருவரும் களமிறங்குவது உறுதி என்று தகவல் கிடைத்துள்ளது. பிரெவிஸ் வருகை சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டரை கூடுதல் வலிமைப்படுத்தும் என்று பார்க்கப்படும் சூழலில், தோனியின் வருகை களத்தில் செய்யும் தவறுகளை குறைக்கும் என்றும் பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி விளையாடியுள்ள 3 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. முதல் போட்டியில் பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும், அடுத்த 2 போட்டிகளிலும் பவுலர்கள் கொடூரமாக செயல்பட்டனர். அதிலும் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் பவுலிங் வரலாற்று சிறப்புமிக்க இடத்தை பிடித்திருந்தது.

இனி சிஎஸ்கே அணி இந்த அளவிற்கு ஒரு மோசமான பவுலிங்கை வீச முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் சிஎஸ்கே அணி அடுத்ததாக சனிக்கிழமையன்று டெல்லி அணிக்கு எதிராக விளையாட உள்ளது. அதற்கு முன் சிஎஸ்கே வீரர்களுக்கு நல்ல ஓய்வும், திட்டமிடுவதற்கான நேரமும் இருக்கிறது. இதனால் அடுத்த போட்டியிலாவது சிஎஸ்கே அணி கம்பேக் கொடுக்கும் என்று பார்க்கப்படுகிறது.
அதற்கேற்ப சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான டிவால்ட் பிரெவிஸ் காயத்தில் இருந்து குணமடைந்திருப்பது தெரிய வந்துள்ளது. ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாகவே பிரெவிஸ் ஓரளவிற்கு வலைப்பயிற்சியில் விளையாட தொடங்கி இருந்தார். தற்போது சென்னையில் முகாமிட்டுள்ள சிஎஸ்கே வீரர்கள் ஓய்வில் இருந்தாலும், பிரெவிஸ் கூடுதல் பயிற்சியை தொடங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதேபோல் தோனியும் அடுத்தப் போட்டியில் களமிறங்குவதற்கான சூழல் அமைந்திருக்கிறது. தசைபிடிப்பு காரணமாக ஓய்வில் இருக்கும் தோனி, நாளை ஃபிட்னஸ் டெஸ்டில் பங்கேற்க இருக்கிறார். அந்த சோதனையில் தோனி நன்றாக முன்னேற்றம் கண்டிருந்தால், அவர் டெல்லி அணிக்கு எதிராக களமிறங்க வாய்ப்புகள் உள்ளது.
டிவால்ட் பிரெவிஸ் சிஎஸ்கே அணிக்குள் வரும் பட்சத்தில் மிடில் ஆர்டரில் கூடுதல் நம்பிக்கை பிறக்கும். அதேபோல் அவரின் அனுபவம் சிஎஸ்கே பேட்டிங்கை வலிமைமிக்கதாக மாற்றும். அதேபோல் தோனி களத்தில் இருக்கும் போது சிஎஸ்கே வீரர்கள் செய்யும் தவறுகள் கட்டுப்படுத்த முடியும். குறிப்பாக சில ஃபீல்டிங் மாற்றங்கள் மிகப்பெரிய பலனளிக்கும் என்று பார்க்கப்படுகிறது.
-
மனசு சிஎஸ்கே-னு சொல்லுது.. மூளை ஆர்சிபி-னு சொல்லுது.. கடைசியாக அஸ்வின் சொன்ன மேட்டர்! -
ஒய்டு யார்க்கர் மட்டுமே திட்டம்.. 5 பவுலர்களின் எகனாமி 12க்கு மேல்.. கொடூரமாக பவுலிங் செய்த சிஎஸ்கே! -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கோயம்பேடு வா.. தாம்பரம் காதலியிடம் இருந்து வந்த அழைப்பு.. காதலனுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு? -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார்












Click it and Unblock the Notifications