சிஎஸ்கே அணி இப்போ ரெடி.. பிரெவிஸ், தோனி கம்பேக் லோடிங்.. இனி 2 விஷயங்கள் மாறப்போகுது!
சென்னை: சென்னை அணிக்காக அடுத்தப் போட்டியில் டிவால்ட் பிரெவிஸ் மற்றும் தோனி ஆகிய இருவரும் களமிறங்குவது உறுதி என்று தகவல் கிடைத்துள்ளது. பிரெவிஸ் வருகை சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டரை கூடுதல் வலிமைப்படுத்தும் என்று பார்க்கப்படும் சூழலில், தோனியின் வருகை களத்தில் செய்யும் தவறுகளை குறைக்கும் என்றும் பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி விளையாடியுள்ள 3 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. முதல் போட்டியில் பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும், அடுத்த 2 போட்டிகளிலும் பவுலர்கள் கொடூரமாக செயல்பட்டனர். அதிலும் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் பவுலிங் வரலாற்று சிறப்புமிக்க இடத்தை பிடித்திருந்தது.

இனி சிஎஸ்கே அணி இந்த அளவிற்கு ஒரு மோசமான பவுலிங்கை வீச முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் சிஎஸ்கே அணி அடுத்ததாக சனிக்கிழமையன்று டெல்லி அணிக்கு எதிராக விளையாட உள்ளது. அதற்கு முன் சிஎஸ்கே வீரர்களுக்கு நல்ல ஓய்வும், திட்டமிடுவதற்கான நேரமும் இருக்கிறது. இதனால் அடுத்த போட்டியிலாவது சிஎஸ்கே அணி கம்பேக் கொடுக்கும் என்று பார்க்கப்படுகிறது.
அதற்கேற்ப சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான டிவால்ட் பிரெவிஸ் காயத்தில் இருந்து குணமடைந்திருப்பது தெரிய வந்துள்ளது. ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாகவே பிரெவிஸ் ஓரளவிற்கு வலைப்பயிற்சியில் விளையாட தொடங்கி இருந்தார். தற்போது சென்னையில் முகாமிட்டுள்ள சிஎஸ்கே வீரர்கள் ஓய்வில் இருந்தாலும், பிரெவிஸ் கூடுதல் பயிற்சியை தொடங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதேபோல் தோனியும் அடுத்தப் போட்டியில் களமிறங்குவதற்கான சூழல் அமைந்திருக்கிறது. தசைபிடிப்பு காரணமாக ஓய்வில் இருக்கும் தோனி, நாளை ஃபிட்னஸ் டெஸ்டில் பங்கேற்க இருக்கிறார். அந்த சோதனையில் தோனி நன்றாக முன்னேற்றம் கண்டிருந்தால், அவர் டெல்லி அணிக்கு எதிராக களமிறங்க வாய்ப்புகள் உள்ளது.
டிவால்ட் பிரெவிஸ் சிஎஸ்கே அணிக்குள் வரும் பட்சத்தில் மிடில் ஆர்டரில் கூடுதல் நம்பிக்கை பிறக்கும். அதேபோல் அவரின் அனுபவம் சிஎஸ்கே பேட்டிங்கை வலிமைமிக்கதாக மாற்றும். அதேபோல் தோனி களத்தில் இருக்கும் போது சிஎஸ்கே வீரர்கள் செய்யும் தவறுகள் கட்டுப்படுத்த முடியும். குறிப்பாக சில ஃபீல்டிங் மாற்றங்கள் மிகப்பெரிய பலனளிக்கும் என்று பார்க்கப்படுகிறது.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications