தமிழக மீனவரை எங்களது கடற்படை சுட்டுக் கொல்லவில்லை.. கூசாமல் பேசும் இலங்கை
தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சுட்டுக்கொல்லவில்லை என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொழும்பு: தமிழக மீனவரை இலங்கைக் கடற்படையினர் சுட்டுக்கொன்றதாக கூறுவதில் உண்மையில்லை என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் கச்சதீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே உள்ள கடல்பகுதியில் நேற்றிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வாட்டர் ஸ்கூட்டரில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதில் பிரிட்ஜோ என்ற மீனவர் கழுத்தில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். மேலும் சரோன் என்பவர் கையில் காயம் ஏற்பட்டது.

இந்த கொலை சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் கண்டனங்களை பதிவிட்டு #TNFishermen என்ற ஹேஸ்டேக் போட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து முதற்கட்ட விசாரணை நடத்தியதாக கூறியுள்ள இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம், தமிழக மீனவர் உயிரிழப்பு குறித்து வருத்தம் தெரிவித்திருப்பதாக கூறியுள்ளது.
இந்திய மீனவர்களை மனிதாபிமானத்துடன் நடத்த உறுதி பூண்டுள்ளது என்று கூறியுள்ள இலங்கை அரசு மீனவர்களை இலங்கை கடற்படை கொன்றதாக கூறுவதில் உண்மையில்லை என்று தெரிவித்துள்ளது.
இந்திய அதிகாரிகள் நடத்தும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றும் வெளியுறவுத்துறை கூறிள்ளது. ஜிபிஎஸ் கருவி மூலம் ஆய்வு நடத்தப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களை சுட்டுக்கொன்று விட்டு முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல இலங்கை அரசு கூசாமல் பொய் சொல்வதாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications