For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை நிலச்சரிவு, வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 203 ஆக உயர்வு

By BBC News தமிழ்
|
சமீபத்திய இயற்கை சீற்றத்தால் இலங்கையில் பலியானவர்களின் எண்ணிக்கை 203 ஆக உயர்வு
Getty Images
சமீபத்திய இயற்கை சீற்றத்தால் இலங்கையில் பலியானவர்களின் எண்ணிக்கை 203 ஆக உயர்வு

இலங்கையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் போன்ற அனர்த்தங்களில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 203 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 96 பேர் தொடர்ந்து காணாமல் போயுள்ளனர்.

நேற்று புதன்கிழமை நண்பகலுக்கு பின்னர் எந்தவொரு சடலங்களும் மீட்கப்படவில்லை என அரசு பேரிடர் முகாமைத்துவ மையம் வெளியிட்டுள்ள தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது.

அரசு பேரிடர் முகாமைத்துவ மையம் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள தகவல் அறிக்கையில், சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மாவட்டத்தில் மரணங்களின் எண்ணிக்கை - 84 பேர். 29 பேரை தொடர்ந்து காணவில்லை என கூறப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தில் 04 பேர் மரணங்கள் பதிவாகியுள்ளன.

சமீபத்திய இயற்கை சீற்றத்தால் இலங்கையில் பலியானவர்களின் எண்ணிக்கை 203 ஆக உயர்வு
Getty Images
சமீபத்திய இயற்கை சீற்றத்தால் இலங்கையில் பலியானவர்களின் எண்ணிக்கை 203 ஆக உயர்வு

களுத்துறை மாவட்டத்தில் 63 பேரின் மரணங்களும் கம்பகா மாவட்டத்தில் 04 மரணங்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. களுத்துறை மாவட்டத்தில் 52 பேரை காணவில்லை என்றும் அரசு பேரிடர் முகாமைத்துவ மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

வெள்ளத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தென் மாகாணத்தில் காலி மாவட்டத்தில் 15 பேரும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 05 பேரும் மாத்தறை மாவட்டத்தில் 28 பேரும் என 48 பேர் உயிழந்துள்ளனர். மாத்தறை 15 பேர் தொடர்ந்து காணாமல் போயுள்ளனர்.

சமீபத்திய இயற்கை சீற்றத்தால் இலங்கையில் பலியானவர்களின் எண்ணிக்கை 203 ஆக உயர்வு
Getty Images
சமீபத்திய இயற்கை சீற்றத்தால் இலங்கையில் பலியானவர்களின் எண்ணிக்கை 203 ஆக உயர்வு

இம்மாவட்டங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக பாதிப்புக்குள்ளான குடும்பங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 60 ஆயிரத்தை தாண்டி அதிகரித்துள்ளதாக அரசு பேரிடர் முகாமைத்துவ மையத்தின் துணை இயக்குநர் பிரதீப் கொடிப்பிலி கூறுகின்றார்.

1 லட்சத்து 63 ஆயிரம் குடும்பங்களை கொண்ட 6 லட்சத்து 30 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 72 ஆயிரம் பேர் 355 பாதுகாப்பான இடங்களில் தொடர்ந்து தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய இயற்கை சீற்றத்தால் இலங்கையில் பலியானவர்களின் எண்ணிக்கை 203 ஆக உயர்வு
Getty Images
சமீபத்திய இயற்கை சீற்றத்தால் இலங்கையில் பலியானவர்களின் எண்ணிக்கை 203 ஆக உயர்வு

1540 வீடுகள் முழுமையாகவும், 7814 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அரசு பேரிடர் முகாமத்துவ மையம் வெளியிட்டுள்ள பிந்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள் :

''அரசு ஊழியர் என்பவர் லட்சிய வேட்கையுடன், அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும்''

நாசாவின் சூரியனை தொடும் முயற்சி; மிஷன் பெயரை மாற்றியது ஏன் ?

'கழிப்பிடங்கள் இங்கே - தண்ணீர் எங்கே?' மோதி தொகுதியில் பொதுக்கழிப்பறைகள் நிலை

'மயில் எப்படி கர்ப்பமாகிறது?' ராஜஸ்தான் நீதிபதி புது விளக்கம்

BBC Tamil
English summary
The death toll in Sri Lanka’s floods has climbed to 203 with 96 people still missing in the country’s worst torrential rains since 2003 that displaced nearly half a million people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X