இலங்கை அதிபர் மைத்ரிபாலவின் 5,000 பேர் கொண்ட பாதுகாப்பு பிரிவு கூண்டோடு கலைப்பு
கொழும்பு: இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் 5,000 பேர் கொண்ட பாதுகாப்புப் பிரிவு கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது. தற்போது மைத்ரிபாலவுக்கு புதிய சிறப்பு கமாண்டோ படை பாதுகாப்பு வழங்குகிறது.
இலங்கையில் வரும் 17-ந் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே போட்டியிடுகிறார். தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும் களத்தில் உள்ளார்.

தமிழர் பகுதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, விடுதலைப் புலி போராளிகளின் கட்சி, தமிழ்த் தேசிய முன்னணி என பல்வேறு கட்சிகள் களத்தில் இறங்கியுள்ளன. இந்நிலையில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் பாதுகாப்பு படை தற்போது கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகாலமாக அப்போதைய அதிபர் ராஜபக்சேவுக்கு பாதுகாப்பு அளித்த படையினரே மைத்ரிபாலவுக்கும் பாதுகாப்பு வழங்கினர். ஆனால் இந்த பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் விளையாட்டு வீரர் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து 5,000 பேர் கொண்ட இந்த பாதுகாப்புப் படை கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்குப் பதிலாக சிறப்பு கமாண்டோ படை மைத்ரிபால சிறிசேனவுக்கு பாதுகாப்பு வழங்க உள்ளது.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications