இந்தியாவுடன் இலங்கை புதிய ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க உறவு எப்படி? அதானி காற்றாலை திட்டம் ரத்தா?
டெல்லி; இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள இடதுசாரி கட்சியான ஜேவிபியின் தலைவர் அனுர குமார திசநாயக்க, தேர்தலின் போது இந்தியாவின் அதானி குழும காற்றாலைத் திட்டத்தை ரத்து செய்வோம் என வாக்குறுதி கொடுத்திருந்தார். தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற அதானி காற்றாலைத் திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்து இந்தியாவுடன் மோதல் போக்கை அனுர குமார திசநாயக்க தொடங்குவாரா? என்பது கேள்வியாக எழுந்துள்ளது.
இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க, ஜேவிபி எனும் இடதுசாரி கட்சியின் தலைவர். இலங்கையில் இந்தியாவின் தலையீட்டை தொடக்கம் முதலே கடுமையாக எதிர்க்கக் கூடிய கட்சி. இந்தியா- இலங்கை ஒப்பந்தம், இலங்கை தமிழர் பிரச்சனைக்கான 13-வது திருத்தம் என எதனையும் ஏற்காத கட்சிதான் ஜேவிபி. இலங்கை என்பது ஒற்றை நாடாகத்தான் இருக்க வேண்டும்; அதிகாரப்பகிர்வு, கூட்டாட்சி அமைப்பு என எதனையும் ஏற்க மறுக்கக் கூடியதும் ஜேவிபிதான்.

இலங்கை ஜனாதிபதி தேர்தலின் போது இலங்கை தமிழ் அரசியல் தலைவர்களுடனான சந்திப்பின் போதும் தமிழர் பிரச்சனைக்கான அரசியல் தீர்வு குறித்து எதுவும் வாக்குறுதி தராதவர்தான் ஜேவிபியின் தலைவரான புதிய ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க.
ஜனாதிபதி தேர்தலில் அனுரவுக்கு சாதகமான களம் இருப்பதாக யூகித்துதான் கடந்த பிப்ரவரி மாதமே அவரை டெல்லிக்ககு வரவழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியது மத்திய அரசு. இந்தியாவுக்கு பெயரளவுக்கு வாக்குறுதி வழங்கிவிட்டு தமது சிங்கள பேரினவாத முகத்தையே தேர்தல் பிரசாரத்தில் வெளிப்படுத்தி இருந்தார் அனுரா.
குறிப்பாக அதானி குழும காற்றாலைத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த திட்டமானது இந்திய கடல் எல்லைக்கு அருகே தமிழ்நாட்டின் கடற்பரப்பை ஒட்டிய தீவுகளில் அமையக் கூடியது. முதலில் சீனாவுக்குதான் இந்த திட்டம் வழங்கப்பட்டது. இந்தியாவின் மிக மிக கடுமையான எதிர்ப்புக்குப் பின்னரே அதானி குழுமத்துக்கு இத்திட்டம் வழங்கப்பட்டது. இந்த திட்டத்தைத்தான் தாம் ஜனாதிபதியானால் ரத்து செய்வோம் என கூறியிருந்தார் அனுர குமார திசநாயக்க. அதானி குழுமத்துக்கு சொந்தமானதுதான் இந்த திட்டம். ஆனால் இந்தியாவின் இருப்பு, செல்வாக்கை வெளிப்படுத்தக் கூடியதும் இந்த திட்டம்.
தேர்தல் கால வாக்குறுதி என்ற அடிப்படையில் அதானி குழும திட்டத்தை ரத்து செய்ய அனுர குமார திசநாயக்க முயன்றால் வெளிப்படையாகவே இந்தியாவுடனான மோதல் போக்காக தொடங்கும். அணடை நாடான மாலத்தீவும் இப்படித்தான் தொடக்கத்தில் இந்தியா எதிர்ப்பு நிலையை கொண்டிருந்தது. காலம் தந்த படிப்பினைகள் இப்போது இந்தியாவுடன் நட்புறவை தேடுகிறது. இலங்கை பொருளாதரப் பேரழிவில் சிக்கிய போது கடனுதவியை வாரிக் கொடுத்தது இந்தியா. சீனாவோ, குறுகிய கால கடன் என்ற பெயரில் இலங்கையின் நிலத்தை கைப்பற்றி வருகிறது. இந்தியாவுடன் நல்லுறவை கடைபிடிக்குமா இலங்கை அல்லது சீனாவின் காலனி நாடாகா உருமாறுமா? என்பது புதிய ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவின் கைகளில்தான் இருக்கிறது!
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications