கொழும்பில் ரஷ்ய அதிகாரிகள்.. எரிபொருள் இறக்குமதிக்கு புதினிடம் கடன் கேட்கும் இலங்கை அதிபர் கோத்தபாய!
கொழும்பு: இலங்கைக்கு எரிபொருள் வழங்க கடன் உதவி செய்ய வேண்டும் என்று ரஷ்யா அதிபர் புதினிடம் இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்று இலங்கைக்கு ரஷ்யா அதிகாரிகளை புதின் அனுப்பி வைத்துள்ளார்.
பொருளாதார பேரழிவு நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை உலக நாடுகளிடம் ஒவ்வொரு அத்தியாவசிய தேவைக்கும் உதவிகளைப் பெற்று வருகிறது. இலங்கைக்கு ஏற்கனவே மிகப் பெரிய அளவில் கடனுதவிகளை வழங்கி உள்ளது.

இலங்கையில் எரிபொருட்களை பெறுவதற்கு பொதுமக்கள் பல நாட்கள், பல கிலோமீட்டர் தொலைவிலான வரிசைகளில் காத்து நிற்கின்றனர். இப்படி காத்து கிடந்தவர்கள் இதுவரை 15 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இலங்கையில் பெட்ரோல், டீசல் விநியோகத்துக்கும் ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுவிட்டன. இதனால் இலங்கையில் பொது போக்குவரத்தும் முற்றாக முடங்கிவிட்டது. அரசு பேருந்துகளிலும் கட்டணங்கள் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுவிட்டன. இலங்கைக்கு இத்தனை நெருக்கடிக்கு மத்தியிலும் வரும் சுற்றுலா பயணிகள், வரும் போது சைக்கிள்களையும் எடுத்து வருகிற அவலம் நிகழ்கிறது.
இந்நிலையில் தங்கள் நாட்டுக்கு எரிபொருள் இறக்குமதி செய்ய கடன் உதவி வழங்க வேண்டும் என்று ரஷ்யாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யாவின் அதிபர் புதினுடன் தொலைபேசியில் உரையாடிய கோத்தபாய ராஜபக்சே இந்த கோரிக்கையை முன்வைத்தார். இதனை கோத்தபாய ராஜபக்சே தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ரஷ்யாவின் பிரதிநிதிகள் 2 பேர் இன்று இலங்கை தலைநகர் கொழும்பு வந்தடைந்தனர். கொழும்பு வருகை தந்த 2 பேரும் ரஷ்யாவின் எரிபொருள் நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆவர். ரஷ்யாவின் மாஸ்கோ- இலங்கையின் கொழும்பு இடையேயான நேரடி விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் ரஷ்யாவின் பிரதிநிதிகள் பஹ்ரைன் மூலமாக இலங்கை வருகை தந்தனர். இலங்கை அரசு சார்பில் விமல் வீரவன்ச உள்ளிட்டோர் ரஷ்யாவின் பிரதிநிதிகளை வரவேற்றனர்.
முன்னதாக ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் எரிபொருள் பெறுவதற்காக இலங்கை அமைச்சர்கள் மாஸ்கோ செல்லவும் முடிவு செய்திருந்தனர். அதேபோல் இலங்கை அதிகர் கோத்தபாய ராஜபக்சேவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்லக் கூடும் எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications