ரூ.1.18 கோடி வங்கிப் பணம் கொள்ளை… தலைமறைவான இசக்கிபாண்டியன் கோர்ட்டில் சரண்
தூத்துக்குடி: ரூ. 1.18 கோடி வங்கிப் பணத்தை கொள்ளையடித்து தலைமறைவான இசக்கி பாண்டியன் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் இன்று சரணடைந்தார்.
சென்னை மதுரவாயல் சுடலைமாடன் கோயில் தெருவில் லாஜி கேஷ் எனும் பெயரில் வங்கி ஏடிஎம்களுக்கு பணப்பரிவர்த்தனை செய்யும் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார் இசக்கி பாண்டியன். சாத்தான்குளம் தாலுகா அரசனூர் அருகில் உள்ள தொடுக்குளம் பகுதியை சேர்ந்தவரான இவர் கார்களில் பணத்தை கொண்டு சென்று ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்பும் இந்த நிறுவனத்தில் ஓட்டுநராக பணி செய்து வந்தார்.

இந்நிலையில், அக். 3ம் தேதி மதியம் 12 மணி அளவில் இந்நிறுவனத்துக்கு சொந்தமான காரில் சென்னையில் உள்ள 10க்கும் மேற்பட்ட ஏடிஎம்களில் நிரப்புவதற்காக ரூ.2 கோடியே 30 லட்சத்தை எடுத்துக் கொண்டு 4 பேர் சென்றனர். காரை இசக்கிபாண்டி ஓட்டிச் சென்றார். பல்வேறு ஏடிஎம்களில் பணத்தை நிரப்பிவிட்டு வேலப்பன்சாவடி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள பேங்க் ஆப் பரோடா ஏடிஎம் மையத்திற்கு பணம் நிரப்ப வந்தனர்.
அப்போது, இசக்கியுடன் சென்ற நான்கு பேரில் இருவர் ஏடிஎம் மையத்தின் உள்ளே பணத்தை நிரப்ப சென்றனர். மற்றொருவர் டீ குடிக்க சென்றுவிட்டார். நேரம் பார்த்து காத்திருந்த இசக்கி பாண்டியன் திடீரென காரை எடுத்துக் கொண்டு ஒரு கோடியே 18 லட்சம் பணத்துடன் தப்பிச் சென்றுவிட்டார்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து விசாரிக்கவும் இசக்கி பாண்டியனை பிடிக்கவும் 5 தனிப்படை அமைக்கப்பட்டன. இசக்கியின் உறவினர் இருக்கும் திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் சென்று தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், போலீசார் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் இசக்கி பாண்டியன் இன்று சரணடைந்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications