மூடப்படும் 1500 டாஸ்மாக் கடைகள்... ஹைகோர்ட் உத்தரவால் அதிரடி சர்வே ஆரம்பம்!
நெல்லை: மதுவினால் நாளுக்கு நாளுக்கு பிரச்சனை அதிகரித்து வருவதால், 1500 மதுக்கடைகளை மூட ஹைகோர்ட் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
தமிழகத்தில் தமிழக அரசின் கீழ் இயங்கும் டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் சுமார் 6800 மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. ஆரம்பத்தில் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் 1500 முதல் 2500 கோடி வரை வருமானம் கூடுதலாக கிடைத்து வந்தது.
மேலும் கடைகளுக்கு மதுவிற்பனை அளவு நிர்ணயிக்கப்பட்டதால் 2015-16ம் ஆண்டில் மட்டும் 25 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.

போராட்டம்...
இந்த வருவாய் மூலமே அதிமுக அரசு இலவச .திட்டங்களையும், நலத்தி்ட்டங்களையும் நடத்தும் நிலை இருந்தது. இதனால் தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை அடைக்க கோரி எதிர்கட்சிகளும், சமூக நல அமைப்புகளும் போராட்டம் நடத்தி வந்தன.

படிப்படியாக மதுவிலக்கு...
இந்த நிலையில் கடந்த சட்டசபைத் தேர்தலில் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆட்சி பொறுப்பு ஏற்றதும் முதலில் 500 மதுக்கடைகளை அடைக்க முதல்வர் உத்தரவிட்டார்.

வழக்கு...
இருப்பினும் கோயில், பள்ளி, கல்லூரி, பஸ் நிலையம், குடியிருப்பு பகுதிகளில் உள்ள கடைகள வழக்கம் போல் இயங்கி வருகின்றன. இதுகுறித்து சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

சர்வே...
இதில் மாநிலம் முழுவதும் கோயில், பள்ளி, கல்லூரி, குடியிருப்பு பகுதிகளில் உள்ள கடைகளை மூடுவது குறித்து சர்வே செய்ய கோர்ட் உத்தரவிட்டதை அடுத்து கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் சர்வே பணியை அதிரடியாக துவங்கி உள்ளனர். இதனால் இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகம் முழுவதும் சுமார் 1500 மதுக்கடைகள் மூடப்பட்டும் என்று தெரிகிறது.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications