விபரீதத்தில் முடிந்த புத்தாண்டு கொண்டாட்டம்.. சென்னையில் ஒரே நாள் இரவில் 170 விபத்துகள் #Accident
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஒரே நாள் இரவில் 170 விபத்துகள் நடைபெற்றன.
சென்னை: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இரு சக்கரம் , 4 சக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கி ஒரே நாள் இரவில் 170 விபத்துகள் நடைபெற்றன. 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தாண்டையொட்டி ஆண்டுதோறும் அதற்கு முந்தைய நாள் நள்ளிரவில் சென்னையில் இளைஞர்கள் கடற்கரை சாலை, கிழக்கு கடற்கரை சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடுவது வழக்கம்.
என்னதான் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கட்டுப்பாடுகளை விதித்தாலும் இளைஞர்கள் தங்கள் வாகனங்களில் அசுர வேகத்தில் சென்று புத்தாண்டு கொண்டாடுவதை விட்டபாடில்லை.

இனிப்பு வழங்கி...
இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சென்னையில் கடற்கரை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் இளைஞர்கள் கூடினர். இதையடுத்து புத்தாண்டு பிறந்ததை அடுத்து வாணவேடிக்கையுடன் இனிப்புகளை வழங்கி உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

ஒரே நாள் இரவில்...
இந்நிலையில் கொண்டாட்டத்துக்கு பிறகு, இரு சக்கர, 4 சக்கர வாகனங்களில் இளைஞர்கள் சீறி பாய்ந்தனர். இதில் 170 விபத்துகள் ஒரே நாள் இரவில் நடைபெற்றன. விபத்தில் காயமடைந்த 200-க்கும் மேற்பட்டோர் ராஜீவ்காந்தி, ராயப்பேட்டை, ஸ்டான்லி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அமைச்சர் ஆறுதல்
மதுபோதையில் அதிவேகமாக வாகனங்களை இயக்கியதே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. விபத்தில் காயமடைந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரை சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்து ஆறுதல் கூறினார்.

உயிரிழப்பு நேராத வண்ணம்
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயிரிழப்பு நேராத வண்ணம் சிகிச்சை அளிக்க அனைத்து நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ரெய்மான் (29), புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக சென்னை மெரினா கடற்கரைக்கு சென்றுவிட்டு இரு சக்கர வாகனத்தில் திரும்பும்போது எழும்பூர் லேன்ட்ஸ் கார்டன் சாலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications