அதிகாரிகள் அலட்சியம்... பேசின்பாலத்தில் பணியில் இருந்த தொழிலாளி கூவத்தில் விழுந்து பலி!
சென்னையில் பேசின்பாலத்தில் பணி செய்து கொண்டிருந்த 19 வயது இளைஞர் கூவம் ஆற்றில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சென்னை : பேசின் பாலத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 19 வயது இளைஞர் கமலேஷ் கூவம் ஆற்றில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டுள்ளார். அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இளைஞரை காப்பாற்றி இருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று காலையில் மழையால் சேதமடைந்த பேசின் பாலத்தை சீரமைக்கும் பணி நடைபெற்றுள்ளது. இந்தப் பணியில் 19 வயது இளைஞ்ர் கமலேஷூம் ஈடுபட்டுள்ளார். அப்போது பிற்பகல் 3 மணியளவில் கமலேஷ் தவறி கூவம் ஆற்றில் விழுந்துள்ளார். இதனையடுத்து அவருடன் பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள் கமலேஷ் குறித்து அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.

ஆனால் இது குறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்து இளைஞரை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கமலேஷின் தாயார் குற்றம்சாட்டியுள்ளார். பணிக்கு சென்ற மகன் வீடு திரும்பவில்லை என்று மாலையில் வந்து கேட்ட போது தான் சக ஊழியர்கள் இந்தத் தகவலைக் கூறியுள்ளனர்.
இதனையடுத்து கமலேஷின் தாயார் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். எனினும் கமலேஷின் சட்டை மற்றும் காலணி மட்டுமே கிடைத்துள்ளதாகவும் கூவம் ஆற்றில் விழுந்த அந்த இளைஞர் உயிரிழந்துவிட்டார் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. கமலேஷ் கூவம் ஆற்றில் விழுந்த உடனேயே நடவடிக்கை எடுத்திருந்தால் அவனை மீட்டிருக்கலாம் என்று அவனது குடும்பத்தார் கண்ணீர் வடிக்கின்றனர். இதனிடையே இறந்த கமலேஷின் உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
சென்னைக்கு சரிபட்டு வராது.. டபுள் டெக்கர் ஓபன் டாப் பஸ் திட்டத்தை கைவிடும் எம்டிசி.. பயணிகளுக்கு ஏமாற்றம் -
மார்ச் மாதத்தில் நடந்த மேஜிக்.. சென்னையில் அசாதாரணமான மழை.. வெதர்மேன் வெளியிட்ட பதிவு -
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
சென்னையில் இப்தார் நோன்பில் திடீர் திருப்பம்: தேஜ கூட்டணி தலைவர்கள் செய்த "அந்த" காரியம்! திமுக குஷி -
சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து மாற்றம்.. ஸ்தம்பித்த ஜிஎஸ்டி சாலை.. வாகன ஓட்டிகள் கவனம் -
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
15 வருட ஏக்கம்! சென்னை வேளாங்கண்ணி இடையே நேரடி ரயில் சேவை! பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி தந்த ரயில்வே -
சென்னை தேர்தல் களத்தில் பிரியாணி கிடையாது? செலவினப் பட்டியலில் விடுபட்டதால் குழப்பம்! -
தண்ணீர் பாட்டில் 35, டிபன் 50, சென்னை வேட்பாளர்கள் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு செலவு செய்யலாம் -
முடங்கிய பணிகள்.. கிளாம்பாக்கம் மெட்ரோவிற்கு ‘பச்சைக்கொடி’ காட்டாத மத்திய அரசு.. எல்லாம் போச்சு











Click it and Unblock the Notifications