அதிகாரிகள் அலட்சியம்... பேசின்பாலத்தில் பணியில் இருந்த தொழிலாளி கூவத்தில் விழுந்து பலி!
சென்னையில் பேசின்பாலத்தில் பணி செய்து கொண்டிருந்த 19 வயது இளைஞர் கூவம் ஆற்றில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சென்னை : பேசின் பாலத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 19 வயது இளைஞர் கமலேஷ் கூவம் ஆற்றில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டுள்ளார். அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இளைஞரை காப்பாற்றி இருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று காலையில் மழையால் சேதமடைந்த பேசின் பாலத்தை சீரமைக்கும் பணி நடைபெற்றுள்ளது. இந்தப் பணியில் 19 வயது இளைஞ்ர் கமலேஷூம் ஈடுபட்டுள்ளார். அப்போது பிற்பகல் 3 மணியளவில் கமலேஷ் தவறி கூவம் ஆற்றில் விழுந்துள்ளார். இதனையடுத்து அவருடன் பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள் கமலேஷ் குறித்து அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.

ஆனால் இது குறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்து இளைஞரை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கமலேஷின் தாயார் குற்றம்சாட்டியுள்ளார். பணிக்கு சென்ற மகன் வீடு திரும்பவில்லை என்று மாலையில் வந்து கேட்ட போது தான் சக ஊழியர்கள் இந்தத் தகவலைக் கூறியுள்ளனர்.
இதனையடுத்து கமலேஷின் தாயார் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். எனினும் கமலேஷின் சட்டை மற்றும் காலணி மட்டுமே கிடைத்துள்ளதாகவும் கூவம் ஆற்றில் விழுந்த அந்த இளைஞர் உயிரிழந்துவிட்டார் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. கமலேஷ் கூவம் ஆற்றில் விழுந்த உடனேயே நடவடிக்கை எடுத்திருந்தால் அவனை மீட்டிருக்கலாம் என்று அவனது குடும்பத்தார் கண்ணீர் வடிக்கின்றனர். இதனிடையே இறந்த கமலேஷின் உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
-
சிறுக சிறுக 25 சவரன் சேர்த்த விசுவாசி… சென்னை தி.நகரில் பிரபல தங்க நகைக்கடை அலறியது ஏன்?” -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
அமைச்சர் சேகர்பாபு மகன்கள் நடத்தும் நிறுவனத்தில் ரெய்டு.. தேர்தல் நேரத்தில் இறங்கிய ஐ.டி அதிகாரிகள் -
சிஸ்டமே மாறப்போகுது.. சென்னையின் போக்குவரத்தையே தடம் தெரியாமல் மாற்ற போகும்.. தங்கமான பிளான் -
சென்னையில் கடும் சம்மருக்கு இடையே திடீர் பிங்க் வசந்தம்.. பூத்து குலுங்கும் மலர்கள்! எப்படி நடந்தது? -
ECR 2.0: சென்னையின் ‘மெகா’ முகம் மாறுகிறது! நந்தவனம் முதல் நட்சத்திர ஹோட்டல் வரை.. எல்லாமே மாறுது -
ராட்சத பலூன்கள்.. ஃபிளாஷ் மாப்கள்.. தேர்தலுக்கு சென்னை எப்படி ரெடியாகிறது தெரியுமா? -
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. இன்னும் 2 நாட்கள் தான் இருக்கு! உடனே விண்ணப்பிங்க -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு












Click it and Unblock the Notifications