அதிகாரிகள் அலட்சியம்... பேசின்பாலத்தில் பணியில் இருந்த தொழிலாளி கூவத்தில் விழுந்து பலி!
சென்னையில் பேசின்பாலத்தில் பணி செய்து கொண்டிருந்த 19 வயது இளைஞர் கூவம் ஆற்றில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சென்னை : பேசின் பாலத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 19 வயது இளைஞர் கமலேஷ் கூவம் ஆற்றில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டுள்ளார். அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இளைஞரை காப்பாற்றி இருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று காலையில் மழையால் சேதமடைந்த பேசின் பாலத்தை சீரமைக்கும் பணி நடைபெற்றுள்ளது. இந்தப் பணியில் 19 வயது இளைஞ்ர் கமலேஷூம் ஈடுபட்டுள்ளார். அப்போது பிற்பகல் 3 மணியளவில் கமலேஷ் தவறி கூவம் ஆற்றில் விழுந்துள்ளார். இதனையடுத்து அவருடன் பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள் கமலேஷ் குறித்து அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.

ஆனால் இது குறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்து இளைஞரை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கமலேஷின் தாயார் குற்றம்சாட்டியுள்ளார். பணிக்கு சென்ற மகன் வீடு திரும்பவில்லை என்று மாலையில் வந்து கேட்ட போது தான் சக ஊழியர்கள் இந்தத் தகவலைக் கூறியுள்ளனர்.
இதனையடுத்து கமலேஷின் தாயார் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். எனினும் கமலேஷின் சட்டை மற்றும் காலணி மட்டுமே கிடைத்துள்ளதாகவும் கூவம் ஆற்றில் விழுந்த அந்த இளைஞர் உயிரிழந்துவிட்டார் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. கமலேஷ் கூவம் ஆற்றில் விழுந்த உடனேயே நடவடிக்கை எடுத்திருந்தால் அவனை மீட்டிருக்கலாம் என்று அவனது குடும்பத்தார் கண்ணீர் வடிக்கின்றனர். இதனிடையே இறந்த கமலேஷின் உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications