For Daily Alerts
Just In
சென்னையில் நகை கடையின் சுவரை ஓட்டை போட்டு கொள்ளை... 2 கிலோ தங்கம் அபேஸ்!
சென்னையில் நகைக்கடையின் சுவரை துளையிட்டு 2 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை அருகே லட்சுமி ஜுவல்லர்ஸ் நகைக்கடையின் பின்பக்க சுவரை துளையிட்டு 2 கிலோ தங்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
கொளத்தூர் அருகே ராஜமங்கலத்தில் உள்ள நகைக்கடையில் இருந்து 2 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கடப்பா ரோட்டில் உள்ள லட்சுமி ஜுவல்லர்ஸ் கடையின் பின்பக்க சுவரை துளையிட்டு மர்ம நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுவரை துளையிட்டு உள்ளே சென்ற மர்மநபர்கள் கடையில் இருந்த 2 கிலோ தங்கத்தை அள்ளிச் சென்றுள்ளனர். கொள்ளையடிக்கப்பட்டுள்ள 2 கிலோ தங்கத்தின் மதிப்பு ரூ. 45 லட்சம் என்று கூறப்படுகிறது. நகைகளை கொள்ளையடித்து சென்றவர்களை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Comments
English summary
Nearly 2 kilograms of gold burgled from Lakshmi Jewellers at Chennai Kolathur by breaking the backside wall of the shop unkonown persons stoled it.
Story first published: Thursday, November 16, 2017, 18:35 [IST]