கரூர்: திமுக பிரமுகர் கொலை வழக்கில் டாக்டர் மகன் சரண்!
கரூர்: கரூரில் தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகி கோபி கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபல டாக்டர் மகன் குருபிரசாத் என்பவர் சிவகங்கை நீதி மன்றத்தில் சரண் அடைந்தார்.
கரூர் திருக்காம்புலியூர் பகுதியைச் சேர்ந்த உதய சூரியன் என்பவரது மகன் கோபி (30). இவர் கரூர் நகர தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளராக உள்ளார்.
இந்த நிலையில், இவருடைய உறவினர் மகன் பிரவீண் என்பவருக்கும், நீலிமேடு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகின்றது.
இதன் காரணமாக அவர்களை சமாதானம் செய்ய தி.மு.க. நிர்வாகி கோபி முயன்றுள்ள்ளார். இதன் தொடர்ச்சியாக டிசம்பர் முதல் தேதி அன்று இரவு 10.30 மணிக்கு , கரூர் லைட்ஹவுஸ் அருகே உள்ள மக்கள் பாதை என்ற பகுதிக்கு சென்றார்.
அப்போது, அங்கு காத்திருந்த மர்ம நபர்கள் திமுக நிர்வாகி கோபியை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர்.
இந்த கொலை வழக்கு தெடார்பாக, கரூரில் வசித்து வரும் டாக்டர் பொன்னையா என்பவரின் மகன் குருபிரசாத் (41), மற்றும் சந்தோஷ் குமார், ஆட்டோ டிரைவர் காளிமுத்து, ராஜா உள்பட சிலர் மீது, கரூர் டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். டாக்டர் பொன்னையா அதிமுகவைச் சேர்ந்தவர்.
இதனையடுத்து, சந்தோஷ்குமார், ராஜா ஆகியோர் கடந்த டிசம்பர் 2 ம் தேதி மானாமதுரை நீதி மன்றத்தில் சரண் அடைந்தனர்.
இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் குருபிரசாத்தை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில், சிவகங்கை ஜே.எம். 1 நீதி மன்றத்தில், குருபிரசாத் சரண் அடைந்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications