”நாட்டில் நடக்கும் குற்றங்களில் பதிவாவது 30 சதவீதம் மட்டுமே” ஆர்.கே.ராகவன் தகவல்
சென்னை: நடைபெறும் குற்றங்களில் 30 சதவீத குற்றங்கள் மட்டுமே பதிவாகின்றன என சி.பி.ஐ முன்னாள் இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நடைபெறும் குற்றங்களின் எண்ணிக்கையில் 30 சதவீதம் மட்டுமே பதிவு செய்யப்படுகின்றன என சி.பி.ஐ முன்னாள் இயக்குநர் ஆர்.கே.ராகவன் கூறினார்.
"குற்றங்களிலிருந்து மக்களை எவ்வாறு காப்பது" என்ற தலைப்பிலான கலந்துரையாடலை சென்னை திருவல்லிக்கேணி கலாசார அகாதெமியும், கஸ்தூரி ஸ்ரீனிவாசன் நூலகமும் இணைந்து வியாழக்கிழமை நடத்தியது.
இதில் பங்கேற்ற சி.பி.ஐ முன்னாள் இயக்குனர் ஆர்.கே.ராகவன் கூறியபோது, "நாட்டில் நடைபெறும் குற்றங்கள் தொடர்பான புள்ளி விவரங்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிடுகிறது. இதில் இடம்பெறும் புள்ளி விவரங்கள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.
நாட்டில் நடைபெறும் குற்றங்களின் எண்ணிக்கையில் 30 சதவீதம் மட்டுமே பதிவாகின்றன. இந்தியாவில் மட்டும் அல்லாமல், உலகளவிலும் எந்த ஒரு குற்றத்தையும் காவல் நிலையத்தில் பதிவு செய்வது என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. குற்ற விவரங்கள் அதிகம் பதிவாவதை அரசியல்வாதிகள் விரும்புவதில்லை.
கடந்த 2012-ஆம் ஆண்டுக்கான குற்றப் புள்ளி விவரங்கள் தேசிய குற்ற ஆவணக் காப்பக இணையதளத்தில் உள்ளன. 2013-ஆம் ஆண்டுக்கான புள்ளி விவரம் இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகலாம்" என்றார் ஆர்.கே.ராகவன்.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications