For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த 5 பேருக்கு திடீர் மயக்கம்!

கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 5 பேருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 5 பேரும் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

கும்பகோணம்: கதிராமங்கலத்தில் கைது செய்யப்பட்ட 10 பேரை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உண்ணாவிரதம் மேற்கொண்ட 5 பேர் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை மாவட்டம், கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகளில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படும் என்று காத்திருப்பு போராட்டம் உள்பட பல்வேறு போராட்டங்களை அப்பகுதி மக்கள் நடத்தி வருகின்றனர்.

5 were fainted in Kathiramangalam hunger strike

இந்நிலையில் ஓஎன்ஜிசிக்கு எதிராகவும், கைது செய்யப்பட்ட 10 பேரையும் விடுவிக்கக் கோரியும் கடந்த 2 நாள்களாக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை கதிராமங்கலம் மக்கள் தொடங்கினர்.

அதில் தண்ணீர் கூட குடிக்காததால் சண்முகசுந்தரம், அமுதா, ராஜேந்திரன், முருகானந்தம் , கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்டோர் மயக்கமடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் 5 பேரும் கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

English summary
Few of Kathiramangalam people staged a hunger strike against ONGC, today 5 were fainted and admitted in Kumbakonam Government hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X