சென்னையில் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்ட 50 ஆட்டோக்கள் பறிமுதல்: 236 வழக்குகள் பதிவு
சென்னை: சென்னையில் அதிகாரிகள் திங்கள்கிழமை நடத்திய அதிரடி சோதனையில் விதிமுறைகளை மீறிய 236 ஆட்டோக்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதோடு, 50 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விதிமுறைகளை மீறும் ஆட்டோக்கள் குறித்த ஆய்வை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் போக்குவரத்து போலீஸாருடன் இணைந்து திங்கள்கிழமை அதிரடி ஆய்வை மேற்கொண்டனர்.
சென்னையில் சுமார் 70 ஆயிரத்துக்கும் அதிகமான ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. பல்வேறு தரப்பினரின் கோரிக்கை, உச்ச நீதிமன்ற உத்தரவு ஆகியவற்றின் அடிப்படையில், சென்னையில் இயங்கும் ஆட்டோக்களுக்கு கடந்த 2013 ஆகஸ்ட் 25-ஆம் தேதி புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி, முதல் 1.8 கிலோ மீட்டருக்கு ரூ.25ம், அதன்பின்னர் ஒவ்வொரு கூடுதல் கிலோ மீட்டருக்கும் ரூ.12 வீதமும் கட்டணம் வசூலிக்க வேண்டும். இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவுக் கட்டணமாக கூடுதலாக 50 சதவீதத்தை பயணிகள் செலுத்த வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் மீது ரூ.2,500 அபராதம் விதிக்கப்படும் என போலீஸ் அறிவித்துள்ளது.

கட்டண கொள்ளை
போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்த நிலையிலும் சென்னையில் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்கதையானது. மீட்டர்கள் இயக்கப்படுவதில்லை என்றும் போக்குவரத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் எழுந்தன.

போலீசார் சோதனை
இதைத் தொடர்ந்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், போக்குவரத்து போலீஸாருடன் இணைந்து திங்கட்கிழமையன்று சென்னை மாநகரம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை முழுவதும் அதிரடி
வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், போக்குவரத்துப் போலீஸார் இணைந்த 24 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட சென்னை மாநகர் முழுவதும் முக்கிய இடங்களில் திங்கள்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனர்.

15 நாட்களுக்கு ஆய்வு
ஆட்டோக்களில் மீட்டர் இயக்கப்படுகிறதா, பயணிகளிடம் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டது. வாகனத்தின் ஆவணங்கள் முறையாக உள்ளனவா என்பன உள்ளிட்ட விவரங்களை சோதனை செய்து நடவடிக்கை எடுக்க அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இப்போது அமைக்கப்பட்டுள்ள குழுக்கள், 15 நாள்களுக்கு ஆய்வுகளை மேற்கொள்ளும். அடுத்ததாக, புதிய குழுக்கள் அமைக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

236 ஆட்டோக்கள் மீது வழக்கு
இந்த ஆய்வில் மொத்தம் 2,506 ஆட்டோக்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் விதிமுறைகளை மீறிய 236 ஆட்டோக்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், முறையாக ஆவணங்கள் இல்லாதது, மீட்டர் இயங்காதது உள்ளிட்ட விதிமுறை மீறல்களில் ஈடுபட்ட 50 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் ஆட்டோக்கள் தீவுத் திடலில் பாதுகாப்பாக நிறுத்திவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

பொதுமக்கள் அதிருப்தி
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ மீது நடிவடிக்கை என்பது கண்துடைப்பு எனப்புகார் தெரிவித்துள்ளனர். போலீஸ் அதிரடி நடவடிக்கை என கூறியும் கூடுதல் கட்டணம் வசூல் நிற்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். கூடுதல் கட்டணம் வசூலித்த ஆட்டோ ஓட்டுநர் மீது அபராதமும் விதிக்கப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துதுள்ளனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications