பொங்கல்: அவனியாபுரத்தில் சீறிப் பாய்ந்தன ஜல்லிக்கட்டு காளைகள்- மாடுபிடி வீரர்கள் அபாரம்!
பொங்கல் விழாவையொட்டி மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது
மதுரை: பொங்கல் விழாவையொட்டி மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் ஆவேசத்துடன் அடக்கினர்.
ஜல்லிக்கட்டு புரட்சியின் மூலம் தமிழர் பண்பாட்டு அடையாளம் மீட்கப்பட்டது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் தடையின்றி நடைபெறுகின்றன.

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தனர். மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராக ராவ் தலைமையில் மாடுபிடி வீரர்கள் காளைகளைப் பாதுகாக்கும் உறுதிமொழி எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து ஊர் மரியாதைக்குரிய காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இதன் பின்னர் வாடிவாசலில் இருந்து காளைகள் தொடர்ந்து சீறி பாய்ந்தன.
மாடுபிடி வீரர்களும் இந்த காளைகளை ஆவேசத்துடன் அடக்கி பரிசுகளை அள்ளிச் சென்றனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 400-க்கும் அதிகமான காளைகள் கலந்து கொண்டன. அதேபோல் 479 மாடுபிடி வீரர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
போதுமான வெளிச்சம் இல்லாத நிலையில் மாலை 5 மணியுடன் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தன. இதனால் பதிவு செய்திருந்த 500-க்கும் அதிகமான ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள் சற்றே ஏமாற்றமடைந்தனர். இன்று காளைகளை அடைக்கும் போது 50-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications