கன்னியாகுமரி மாவட்டத்தில் 601 மீனவர்களை கரை திரும்பவில்லை: ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான்
கன்னியாகுமரி மாவட்டத்தில் 601 மீனவர்கள் கரை திரும்பவில்லை என மாவட்ட ஆட்சி சஜ்ஜன்சிங் சவான் கூறியுள்ளார்.
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 601 மீனவர்கள் கரை திரும்பவில்லை என அம்மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட மீனவர் கிராமங்களை இன்று சஜ்ஜன்சிங் பார்வையிட்டார். அங்கு மீனவர்கள் குடும்பங்களுக்கு அவர் ஆறுதல் கூறினார்.
அப்போது செய்தியாளர்களிடம் சஜ்ஜன்சிங் சவான் கூறியதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 601 மீனவர்கள் கரை திரும்பவில்லை. தற்போது பாதிக்கப்பட்ட 32,000 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ3,500 நிவாரண உதவி வழங்கப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 601 மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை - ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான்#SaveOurFishermen #CycloneOckhi
— News18 Tamil Nadu (@News18TamilNadu) December 10, 2017
இந்த நிவாரண உதவித் தொகை 3 நாட்களுக்குள் வங்கிக் கணக்கில் ஒப்படைக்கப்படும். மேலும் உயிரிழந்த மீனவர்களுக்கான இறப்பு சான்றிதழ் 3 மாதங்களுக்குள் வழங்கப்படும்.
இவ்வாறு சஜ்ஜன்சிங் சவான் கூறினார்.