மழை நிவாரணம்.. காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கூடுதலாக 7 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, பிரவீன்நாயர், அருண்தம்புராஜ், கண்ணன், ஆனந்த், தினேஷ் அலிவார், ஜான் லூயிஸ், அருண் தயாளன் ஆகிய 7 ஐஏஎஸ் அதிகாரிகள் மழை நிவாரண பணிகளை பார்வையிட கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்
Subscribe to Oneindia Tamil
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய கூடுதலாக 7 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தைக் கண்காணிக்க சில தினங்களுக்கு முன்பாக, முனியநாதன் (தாம்பரம் மற்றும் பல்லாவரம்), சிவசண்முகராஜா (செங்கல்பட்டு மற்றும் திருக்கழுக்குன்றம்) மற்றும் சுப்பையன் (ஆலந்தூர் மற்றும் சோழிங்கநல்லூர்) ஆகிய 3 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

மழை தொடரும் நிலையில், பிரவீன்நாயர், அருண்தம்புராஜ், கண்ணன், ஆனந்த், தினேஷ் அலிவார், ஜான் லூயிஸ், அருண் தயாளன் ஆகிய 7 ஐஏஎஸ் அதிகாரிகள் மழை நிவாரண பணிகளை பார்வையிட கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதுகுறித்து உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications