முதலில் சிலிண்டர் வெடித்ததாக நினைத்தோம்.. குண்டுவெடிப்பில் உயிர் தப்பிய பெங்களூர் குடும்பம் பேட்டி
சென்னை: டார்ஜிலிங்கிற்கு விடுமுறையை கழிக்க கவுகாத்தி எக்ஸ்பிரஸில் கிளம்பிய பெங்களுரைச் சேர்ந்த குடும்பம் ஒன்று சென்னை குண்டுவெடிப்பு சம்பவத்தில் காயம் இன்றி பிழைத்ததை நினைத்து கடவுளுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
பெங்களூரில் உள்ள ப்ரோஎக்ஸ் கன்சல்டன்சி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனர் ஸ்ரீஹர்ஷா சாலிமத். அவரது சொந்த ஊர் தாவணகரே. அவர் தனது மனைவி சிந்து, குழந்தைகள், உறவினர்கள் என்று 8 பேருடன் விடுமுறையை கழிக்க மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கிற்கு கவுகாத்தி எக்ஸ்பிரஸில் கிளம்பினார்.
அவர்களின் ரயில் இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைந்தபோது அதில் 2 குண்டுகள் வெடித்தன. இதில் ஸ்வாதி என்ற ஆந்திர மாநில பெண் பலியானார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீஹர்ஷா ஒன்இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,
Image Courtesy: Sriharsha Salimath

சிலிண்டர் வெடிப்பு
ரயிலில் திடீர் என்று ஏதோ வெடிக்கும் சத்தம் கேட்டது. முதலில் நாங்கள் சிலிண்டர் தான் வெடித்தது என்று நினைத்தோம். பின்னர் தான் குண்டுகள் வெடித்தது தெரிய வந்தது.

போலீசார்
போலீசார் பயணிகளுக்கு தைரியம் கூறி அவர்களுக்கு தண்ணீர் மற்றும் பிஸ்கட்டுகள் வழங்கி ஆசுவாசப்படுத்தினர்.

உடைமைகள்
குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு போலீசார் ரயில் மற்றும் அதில் பயணித்தவர்களின் உடைமைகளை சோதனை செய்தனர்.

பயணிகள்
குண்டுவெடிப்பு சம்பவத்தால் கவுகாத்தி எக்ஸ்பிரஸில் மீண்டும் பயணிக்க பயந்து யாரும் திரும்பவில்லை. அனைவரும் ரயிலில் தங்கள் பயணத்தை தொடர்ந்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த சென்னை போலீசாருக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications