”பிச்சை புகினும் கற்கை நன்றே” படிக்க வயது தடை இல்லை என நிரூபித்த தந்தை
நாகை: படிப்பதற்கு வயது தடையில்லை என்ற கூற்றின்படி பிளஸ் 2 தேர்வெழுதியுள்ளார் ஒரு தந்தை, தனது மகளுடன் இணைந்து.
நாகை மாவட்டம் சீர்காழியில் திங்கள்கிழமை நடைபெற்ற பிளஸ் 2 தேர்வை தந்தையும் மகளும் வெவ்வேறு மையங்களில் எழுதிய சுவாரஸ்யமான நிகழ்வு நடைபெற்றது.
சீர்காழி வட்டம், வேட்டங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கு. மாரிமுத்து . இவர் ஒரு சாலைப் பணியாளர்.
ஒன்பதாம் வகுப்பில் தோல்வியடைந்ததால் மேற்கொண்டு படிப்பை தொடராமல் விட்டுவிட்டார்.
இந்நிலையில், மாரிமுத்துவுக்கு மேற்படிப்பு படிக்க ஆசை. இதுகுறித்து தனது மூத்த மகள் சுபஸ்ரீதேவியிடம் தெரிவித்தார்.
சுபஸ்ரீதேவியும் தனது தந்தை தனித்தேர்வராக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உதவி செய்தார்.
இதன்படி, 2010-ம் ஆண்டு மூத்த மகள் சுபஸ்ரீதேவியுடன், மாரிமுத்து பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்தார். படிப்பிற்கு வயது தடையில்லை என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில், கடந்த 2012 ஆம் ஆண்டு மாரிமுத்து வரலாறு பாடப் பிரிவை விருப்பப் பாடமாக எடுத்து, பிளஸ் 2 தேர்வை மகள் சுபஸ்ரீதேவியுடன் எழுதினார்.
ஆனால் அவர் வணிகவியல், பொருளியல் பாடங்களில் தோல்வியடைந்தார்.
சற்றும் மனம் தளராத மாரிமுத்து, தனித்தேர்வராக இந்த ஆண்டும் பிளஸ் 2 தேர்வெழுதினார். ஆனால், இந்த முறை தனது இளைய மகள் மோனிஷாவுடன் அவர் தேர்வு எழுதியது குறிப்பிடத்தக்கது.
திங்கள்கிழமை மோனிஷா சீர்காழி சியாமளா பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், மாரிமுத்து செம்பனார்கோவில் பகுதியில் உள்ள தேர்வு மையத்திலும் தேர்வெழுதினர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications