திருக்கோவிலூர் பஸ்ஸில் தொழிலாளி மரணம்..சடலத்துடன் நண்பரையும் இறக்கிவிட்ட "இரக்கமற்ற" கன்டக்டர்...
பெங்களூரிலிருந்து திருக்கோவிலூர் செல்லும் பேருந்தில் தொழிலாளி மரணமடைந்ததால் சடலத்துடன் சேர்த்து நண்பரையும் அந்த பஸ் கன்டக்டர் இறக்கிவிட்டார்.
திருக்கோவிலூர்: பெங்களூரிலிருந்து திருக்கோவிலூர் வந்த போது பேருந்திலேயே இறந்த தொழிலாளியின் சடலத்துடன் அவரது நண்பரையும் பஸ் கன்டக்டர் நடு வழியில் இறக்கிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊதிய உயர்வு கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஆட்டோ, வேன் ஓட்டுநர்கள், அண்ணா தொழிற்சங்க டிரைவர்களை கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பெங்களூரிலிருந்து திருக்கோவிலூருக்கு இரு தொழிலாளிகள் பேருந்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த இருவரில் ஒருவர் இறந்துவிட்டார்.
இதையறிந்த நடத்துநர் சடலத்தை எடுத்துக் கொண்டு செல்லுமாறு நண்பரிடம் கூறினார். ஆனால் அவரோ திருக்கோவிலூரில் இறக்கிவிடுமாறி கூறியும் அதை பேருந்து நடத்துநர் கேட்க வில்லை.
பின்னர் ஈவு இரக்கமின்றி பேருந்திலிருந்து நண்பரையும் சடலத்துடன் நடுவழியில் இறக்கிவிட்டு விட்டார். இதனால் நடுவழியில் நின்று கொண்டு சொந்த ஊர் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகிறார் அந்த நண்பர்.
இறக்கிவிட்டது மட்டுமல்லாமல் பேருந்தில் பயணம் செல்ல இருவர் எடுத்த டிக்கெட்டுகளையும் அந்த நடத்துநர் பறித்து சென்றதாக நண்பர் புகார் கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications