அடுத்து என்ன பண்ணலாம்.. மன்ற நிர்வாகிகளுடன் ஒரு மணிநேரம் ஆலோசித்த ரஜினிகாந்த்!
அடுத்த கட்ட செயல்பாடு குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் ஒரு மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை: அடுத்த கட்ட செயல்பாடு குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் ஒரு மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக கடந்த டிசம்பர் 31ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனது கட்சி போட்டியிடும் என்றும் அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து கட்சி மற்றும் சின்னம் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் ஈடுபட்டு வருகிறார். அதேநேரத்தில் கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

ராகவேந்திர மண்டபம்
இந்நிலையில் தனது கட்சிக்கு நிர்வாகிகளை நியமிப்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது ராகவேந்திரா மண்டபத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது.

ஒரு மணிநேரம்
மக்கள் மன்ற நிர்வாகிகள் சுதாகர், ராஜ மகாலிங்கம் உள்ளிட்ட பல நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டம் சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்றது.

வீடியோ கான்ஃபிரன்ஸிங்
அப்போது கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்சியை பலப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. ஏற்கனவே வீடியோ கான்ஃபிரன்ஸிங் மூலம் நிர்வாகிகளுடன்
ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார்.

வீடியோ கான்ஃபிரன்ஸிங் மூலம்
இந்நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தின்போது மாவட்ட வாரியாக நேரில் சென்று கள ஆய்வு செய்யலாமா அல்லது வீடியோ கான்ஃபிரன்ஸிங் மூலமே நிர்வாகிகளை நியமிக்கலாமா என ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications