செம்மரக் கடத்தல்: தேவையில்லாமல் என் பெயரை இழுக்கிறார்கள்... கமிஷனரிடம் நடிகர் சரவணன் புகார்
சென்னை: செம்மரக் கடத்தல் விவகாரத்தில் தனது பெயரைத் தேவையில்லாமல் இழுப்பவர்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து நடிகர் சரவணன் புகார் கொடுத்தார்.
செம்மரக் கடத்தல் விவகாரம் பெரும் பரபரப்பை சமீப காலமாக கிளப்பி வருகிறது. சமீபத்தில் திருப்பதி அருகே வனப்பகுதியில் வைத்து 20 தமிழர்களை ஈவு இரக்கமே இல்லாமல் ஆந்திரப் போலீஸார் சுட்டுக் கொன்றனர். இதனால் இரு மாநிலங்களுக்கும் இடையே நிலவி வந்த நல்லுறவில் விரிசல் விழுந்துள்ளது.

இந்த நிலையில் சில முன்னாள் ஆந்திர, தமிழக அமைச்சர்களுக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும்,அவர்களைப் போலீஸார் கைது செய்ய முயன்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தச் சூழ்நிலையில் தனது பெயரை தேவையில்லாமல் செம்மரக் கடத்தலுடன் இணைத்து சிலர் சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாக நடிகர் சரவணன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆந்திர போலீஸார் நடிகர் சரவணன் உள்ளிட்ட சிலரைக் கைது செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் சிலர் எழுதியிருந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன், தான் தாம்பரம் அருகே படப்பிடிப்பில் இருந்ததாகவும், தான் கைது செய்யப்படவில்லை என்றும் தேவையில்லாமல் தனது பெயரை ஏன் இதில் இழுக்கிறார்கள் என்று தெரியவில்லை என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து அவர் புகார் மனு ஒன்றை அளித்து விட்டுச் சென்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications