தருமபுரி அருகே மதுவில் போதை பொருள் கலந்து குடிந்த 4 பேர் பலி...ஒருவர் கவலைக்கிடம்!
பென்னாகரம் அருகே மதுவில் போதை பொருள் கலந்து குடித்ததில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தருமபுரி : பென்னாகரம் அருகே அதிக போதைக்காக மதுவில் போதை பொருள் கலந்து குடித்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி பென்னாகரம் அருகே உள்ள ஏரியூரில் பச்சையப்பன், விஜய்,பழனிசாமி உள்ளிட்ட 5 பேர் மதுபானத்தில் போதைப் பவுடர் கலந்து குடித்துள்ளதாக தெரிகிறது. இதனால் மயங்கி விழுந்த அவர்களை தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரவு முதல் தீவிரமாக சிகிச்சை அளித்து, மருத்துவப் பலனின்றி 3 பேரும் உயிரிழந்தனர். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உத்தரகுமார் உள்ளிட்ட 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பெற்றவர்களில் மேலும் ஒருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது
இதனையடுத்து அவர்கள் மதுபானம் அருந்திய இடத்தில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது மது பாட்டில்களுக்கு அருகில் கிடந்த போதைப் பொருள் பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எனினும் மதுவில் போதைப் பொருள் கலந்து குடித்தால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதா, அல்லது அது கள்ளச்சாராயமா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications