ஜெயலலிதா பிரச்சார கூட்டத்தை படம்பிடித்த வார இதழ் போட்டோகிராபர் மீது போலீஸ் தாக்குதல்
சென்னை: சென்னை, தீவுத் திடலில் நேற்று மாலை நடைபெற்ற ஜெயலலிதா பிரசார பொதுக்கூட்டத்தில் ஆனந்த விகடன் போட்டோகிராஃபர், மீ.நிவேதன் போலீஸ் அதிகாரியால் தாக்கப்பட்டார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளுக்கும் சமீபத்தில் வேட்பாளர்களை அறிவித்த அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா, நேற்று மாலை சென்னை தீவுத் திடலில் பிரசாரத்தை துவங்கினார். அப்போது அதிமுகவின் சார்பில் சென்னை மாவட்டத்தில் உள்ள வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசினார்.

நிகழ்ச்சியின்போது, ஆனந்த விகடனின் போட்டோகிராஃபர் மீ.நிவேதன் தொண்டர்கள் அமர்ந்திருந்த பகுதியை பார்த்து போட்டோ எடுத்துக்கொண்டு இருந்தார். அப்போது பாஸ்கர் என்ற போலீஸ் அதிகாரி வந்து, "காலி நாற்காலிகளை படம் எடுக்குறீயா? எந்த பத்திரிகை? உங்களுக்கு இதுதான் வேலையா? நக்ஸலைட் கேஸ்ல உள்ள தூக்கி போட்ருவேன்" என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, உடன் இருந்த 10க்கும் மேற்பட்ட போலீசார் நிவேதனை தாக்கியதோடு அவரின் கேமரா, செல்போன், பர்ஸ், கேமரா பேக் அனைத்தையும் பிடுங்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.
அந்த விலை உயர்ந்த கேமராவை அதிமுக தொண்டர்களிடம்கொடுத்து, சோதனை செய்ய சொல்லியுள்ளார் பாஸ்கர். கேமராவில் இருந்த சிப்பை அதிமுகவினர் வெளியே எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. பிறகு 30 நிமிடங்களாக போலீசார், நிவேதனை மிரட்டிக்கொண்டு இருந்தனர்.
இதை அறிந்ததும், பிற பத்திரிகைகளை சேர்ந்த நிருபர்களும், புகைப்படகலைஞர்களும் அங்கு விரைந்துள்ளனர். இதை பார்த்ததும், நைசாக ‘நிவேதனை தாக்க வந்த கட்சியினரிடம் இருந்து நாங்கள்தான் காப்பாற்றினோம்' என்று போலீசார் கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
நிவேதன் தாக்கப்பட்டது குறித்து, தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக அந்த பத்திரிகை வட்டாரங்கள் கூறுகின்றன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications