டிராக் மாறி ஓடிய சென்ட்ரல்-அரக்கோணம் விரைவு ரயில்.. பீதியில் அலறிய பயணிகள்
சென்னை: சென்னை சென்ட்ரல், கும்மிடிப்பூண்டி அரக்கோணம் மார்க்கத்தில் ரயில்கள் தடம் மாறி சென்றதால் ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.
சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணத்துக்கு விரைவு மின்சார ரயில் நேற்று இரவு வழக்கம்போல் புறப்பட்டது. அடுத்த ரயில் நிலையமான பேசின்பாலத்துக்கு சென்றபோது அரக்கோணம் செல்லும் பாதைக்கான 1வது நடைமேடையில் செல்லாமல் கும்மிடிப்பூண்டி செல்லும் பாதைக்கான 6வது நடைமேடைக்கு சென்றது.

இதை கண்ட பயணிகள் பெரும் பீதி அடைந்தனர். ரயில் பாதை மாறி செல்வதை உணர்ந்தும், சிக்னல் அந்த பக்கமாக விழுந்ததால் வேறு வழியின்றி டிரைவர் ரயிலை 6வது நடைமேடைக்கு இயக்கினார். ரயில் நின்றதும் பயணிகள் ஓடிச்சென்று அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் முறையிட்டனர். இதனால் பேசின்பாலம் ரயில் நிலையத்தில் பரபரப்பு காணப்பட்டது.
இதையடுத்து அங்கு விரைந்த அதிகாரிகள், சிக்னல் கோளாறு இருந்ததை கண்டுபிடித்தனர். ரயில் நிலையத்தில் நிறுத்தும் சமயம் என்பதால் விபத்து எதுவும் ஏற்படவில்லை. ரயில் சென்று கொண்டிருக்கும்போது இதுபோன்று சிக்னல் கோளாறு ஏற்பட்டிருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.
ஒருவேளை கும்மிடிப்பூண்டிக்கு செல்ல வேண்டிய ரயில் அந்த சமயத்தில் அங்கு சென்றிருந்தாலும் விபத்து ஏற்பட்டிருக்கும். நல்ல வேளையாக உடனடியாக சிக்னல் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டு விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர், இரவு 8 மணிக்கு சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் செல்லும் மற்றொரு விரைவு ரயில் 8.10 மணி அளவில் பேசின்பாலம் ரயில் நிலையம் வந்தது. பாதை மாறி சென்ற ரயிலில் இருந்த பயணிகள் 8 மணி ரயிலில் ஏற்றுவிடப்பட்டனர்.
பாதை மாறி சென்ற விரைவு ரயில் இரவு சென்ட்ரல் ரயில் நிலையம் கொண்டு செல்லப்பட்டது.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications