அரவிந்த் ரெட்டி கொலை வழக்கு: போலி குற்றவாளிகளை கைது செய்த டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர் டிரான்ஸ்பர்
வேலூர்: அரவிந்த்ரெட்டி கொலை வழக்கில் போலி குற்றவாளிகளை கைது செய்த டி.எஸ்.பி மற்றும் இன்ஸ்பெக்டர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
வேலூரை சேர்ந்த பா.ஜனதா மருத்துவ அணி மாநில செயலாளர் டாக்டர் அரவிந்த்ரெட்டி கடந்த ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வேலூர் டி.எஸ்.பி. தட்சிணாமூர்த்தி தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
ரியல் எஸ்டேட் சம்பந்தமாக அரவிந்த் ரெட்டியை கூலி படையினர் கொலை செய்ததாகவும், கூலிபடை யினர் வசூர்ராஜா, தங்கராஜ், பிச்சைபெருமாள் உள்பட 4 பேரை கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார் பரபரப்பு பேட்டியும் அளித்தனர்.
இந்த நிலையில் சென்னை, புத்தூரில் பிடிபட்ட தீவிரவாதிகள் பிலால்மாலிக், போலீஸ்பக்ருதீன் ஆகியோரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நடத்திய விசாரணை யில் அரவிந்த்ரெட்டியை தீவிரவாதிகள் கொலை செய்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அரவிந்த்ரெட்டி கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. அவர்கள் தொடக்கத்தில் இருந்து விசாரித்தனர். இந்த வழக்கில் கைதான கூலிப்படையினர் போலி குற்றவாளிகள் என்பது உறுதியானது.
எனவே கூலிப்படையினரைக் கைது செய்த. டி.எஸ்.பி. தட்சிணாமூர்த்தி ராமநாதபுரம் மாவட்டம் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்கும் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தெற்கு மண்டலத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை வழக்கில் விசாரணை நடத்திய வேலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரையிடம் வேலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்தில் ஆதாரங்கள் ஏதாவது சிக்கியதா? கூலிபடையினரை கைது செய்ய என்ன காரணம் என்பது குறித்து விசாரித்தனர். மேலும் போலியாக கைது செய்யபட்ட கூலிபடையினரிடம் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு மனுதாக்கல் செய்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications