வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோழைகளை கைது செய்: மதுரையில் போஸ்டர் ஒட்டிய அஜீத் ரசிகர்கள்
மதுரை: அஜீத் குமாரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை கைது செய்யக் கோரி அவரது ரசிகர்கள் மதுரையில் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு நேரத்தில் மர்ம ஆசாமி ஒரருவர் திருவல்லிக்கேணியில் உள்ள 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தார். அஜீத் குமாரின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது விரைவில் வெடிக்கும் என்று கூறிய அவர் இணைப்பை துண்டித்துவிட்டார்.
இது குறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார்
தகவல் கிடைத்தவுடன் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் அஜீத் வீட்டுக்கு விரைந்து சென்று சோதனை நடத்தியதில் குண்டு எதுவும் சிக்கவில்லை.
'குடி'மகன்
யாரோ ஆசாமி குடிபோதையில் உளறியிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அந்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.
போஸ்டர்
அஜீத் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை கைது செய்யக் கோரி அவரது ரசிகர்கள் மதுரையில் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
கோழைகளை கைது செய்
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோழைகளை கைது செய்! சாவுக்கு பயந்தவனுக்கு தினம் தினம் சாவு, எதுக்குமே பயப்படாதவனுக்கு ஒரு தடவை தான் சாவு, எங்க தலயை தொடணும்னா... எங்களை தாண்டி தொட்டுப்பாருங்கடா பார்ப்போம் என்று அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.