திருவண்ணாமலையில் பரணிதீபம் ஏற்றப்பட்டது, மாலையில் மகாதீபம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று காலை பரணி தீபம் ஏற்றப்பட்டது.
திருவமண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 8ம் தேதி துவங்கியது. கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில் கடந்த 13ம் தேதி வெள்ளித் தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. மறுநாள் அதாவது கடந்த 14ம் தேதி மகாதேரோட்டம் நடைபெற்றது.

தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகாதீபம் கோவிலுக்கு பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் இன்று மாலை 6 மணிக்கு ஏற்றப்படுகிறது. முன்னதாக இன்று காலை சாமி சன்னதியில் இருக்கும் அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இன்று மாலை பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம். அலங்காரம், தீபாராதனை செய்யப்படும். மேலும் மாலை 5.30 மணிக்கு மேல் விநாயகர், முருகர், அண்ணாமலையார், அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் ஒவ்வொருவராக பலிபீடம் அருகே எழுந்தருள உள்ளனர்.
இதையடுத்து அர்த்தநாரீஸ்வரர் சாமி சன்னதியில் இருந்து ஆடியபடியே வருவார். அவர் காட்சி அளித்த பிறகு சாமி சன்னதி முன்பு அகண்ட தீபமும், அதே சமயத்தில் ராட்சத கொப்பரையில் மகாதீபமும் ஏற்றப்படும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications