கோவை வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை மாற்றக் கோரி பாஜகவினர் உண்ணாவிரதம்!
கோயம்புத்தூர்: கோவை பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி அக்கட்சி தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி பல மாத இழுபறிக்குப் பின்னர் நேற்றுதான் இறுதி செய்யப்பட்டு கூட்டணிக் கட்சிகளுக்கும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டன. அத்துடன் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்தன.

பாஜக அறிவித்த பட்டியலில், கோயம்புத்தூரில் மூத்த பாஜக தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே அத்தொகுதியில் வானதி சீனிவாசன், ஜி.கே. செல்வகுமார், எஸ்.ஆர். சேகர் ஆகியோர் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை திடீரென கோயம்புத்தூர் பாஜக அலுவலகத்துக்கு சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட அக்கட்சி தொண்டர்கள், வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை மாற்றக் கோரி முழக்கம் எழுப்பினர். அத்துடன் பாஜக அலுவலகலத்திலேயே உண்ணாவிரதமும் மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகாலமாக பாஜக நிகழ்ச்சிகள் எதிலுமே கலந்து கொள்ளாத சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு எப்படி சீட் கொடுக்கலாம்? அவரை மாற்றும்வரை உண்ணாவிரதம் தொடரும் என்று பாஜக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.
-
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி












Click it and Unblock the Notifications