காவல் நிலையத்துக்குள் புகுந்து எஸ்ஐயை மிரட்டிய மினி பஸ் டிரைவர் கைது
சுரண்டை: சுரண்டை அருகே காவல் நிலையத்துக்குள்ளேயே புகுந்து எஸ்ஐயை மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியிலிருந்து விகேபுரத்திற்கு மினி பஸ் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாலை அங்குள்ள சந்தனமாரியம்மன் கோவில் பகுதியில் இட நெருக்கடியான பகுதியில் திரும்பி கொண்டிருந்த போது அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த விகேபுரம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் பஸ்சை தடுத்து நிறுத்தி நெருக்கடியான இடத்தில் இப்படி பஸ்சை திருப்ப கூடாது என கண்டித்தார்.
இதையடுத்து மினி பஸ்சில் இருந்த டிரைவர் வெங்கடேஷ்வரனுக்கும், சப் இன்ஸ்பெக்டருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இந்த தகவலை கண்டக்டர் பாலசுப்பிரமணியன் செல்போன் முலம் பஸ் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார். தகராறு ஏற்பட்டதால் அங்கு கூட்டம் கூடியது. இதனால் கடுமையாக போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
இதனால் மினி பஸ்சை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வரும்படி கூறிவிட்டு சப் இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டருக்கு தகவல் தெரிவிக்க உடனடியாக காவல் நிலையத்துக்கு விரைந்தார். இதை தொடர்ந்து வந்த மினி பஸ் உரிமையாளர் செல்வன் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கடுமையாக மிரட்டி விட்டு சென்றார்.
இதுகுறித்து சிறப்பு எஸ்ஐ முருகேசன் புகாரில் பேரில் டிரைவர் வெங்கடேஷ்வரன், கண்டக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மினி பஸ் பறிமுதல் செய்யப்பட்டது. மிரட்டி சென்ற உரிமையாளர் செல்வனை இன்ஸ்பெக்டர் மாடசாமி தேடி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications