For Daily Alerts
Just In
”வண்டலூரில் வந்துருச்சு வண்ணத்துப்பூச்சி பூங்கா”- திறந்து வைத்தார் முதல்வர் ஜெயலலிதா
சென்னை: வண்டலூரில் 4 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவை முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.
மேலும், சுற்றுலா மற்றும் கலை பண்பாட்டுத் துறை சார்பில் திருச்சி மாவட்டம் துவாக்குடியில் ஆடவர் விடுதிக்கட்டடம், கல்லணையை பார்வையிட வருகை தரும் சுற்றுலாப்பயணிகளுக்கு காவிரி விளக்கக் கூடம் போன்றவற்றையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
தமிழக அரசு சார்பில் இன்று மொத்தம் 18 கோடி 95 லட்சம் ரூபாய் மதிப்பிலான கட்டடங்கள் மற்றும் பண்பாட்டு மையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
அருங்காட்சியகத் துறை சார்பில் ஓலைச் சுவடிகளில் இருந்து பதிப்பிக்கப்பட்டு மறு அச்சிடப்பட்ட 6 நூல்களையும் முதல்வர் ஜெயலலிதா வெளிட்டார்.
English summary
Vandalur butterfly park inaugurated by TN government today.
Story first published: Saturday, September 19, 2015, 16:12 [IST]