செந்தூர்பாண்டியன் மறைவு.. கடையநல்லூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுமா?
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் மரணத்தை தொடர்ந்து கடையநல்லூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுமா இல்லையா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில், இடைத்தேர்தல்களுக்கான நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, முதல்வரோ, அமைச்சரோ சட்டமன்ற அல்லது சட்ட மேலவை உறுப்பினராக இருக்க வேண்டியது அவசியம். பதவியேற்ற ஆறு மாதங்களுக்குள்ளாக இவ்விரு பதவிகளில் ஏதாவது ஒன்றை அவர் அடைந்தாக வேண்டும்.
பிரதமராக இருந்தால் மக்களவை அல்லது மாநிலங்களவை உறுப்பினராக வேண்டியது அவசியம்.

ஆறு மாதங்களுக்குள்
எம்.எல்.ஏ ஒருவர் மறைந்துவிட்டாலோ, ராஜினாமா செய்தாலோ அத்தொகுதிக்கும் 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும். அப்படிப்பார்த்தால், செந்தூர்பாண்டியன் மறைவையடுத்து, அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட கடையநல்லூர் சட்டசபை தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற வேண்டும்.

ஓராண்டுக்கு உள்ளே
ஆனால், எம்.எல்.ஏவின் பதவிக்காலம் 1 ஆண்டுக்கும் குறைவாக இருக்கும் ஒரு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவது எளிதன்று. 2011 ஏப்ரல் மாதம், தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில்தான் செந்தூர்பாண்டியனும் வெற்றி பெற்றார்.

ரூல்ஸ் படி போனால்..
அந்த அடிப்படையில், இன்னும் ஓராண்டுக்கும் குறைவாகவே, அவரின் பதவிக்காலம் உள்ளது. அதேநேரம், பொதுத்தேர்தல் நடைபெற இன்னும் 8 மாதங்கள் உள்ளது. ஆறுமாதங்களுக்கு மேல் ஒரு தொகுதியை காலியாக வைத்திருக்க கூடாது என்ற ரூல்ஸ் படி போனால் இடைத்தேர்தல் கட்டாயம்.

மத்திய அரசிடம் ஆலோசனை
ஆனால், ஓராண்டுக்கு குறைவான பதவிக்காலம் உள்ள சட்டசபை தொகுதியில், இடைத்தேர்தல் நடத்த வேண்டுமானால், மத்திய அரசிடம், தேர்தல் ஆணையம் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் ஒரு விதிமுறை உள்ளது. அப்படி கலந்தாலோசிக்கும்போது மத்திய அரசு, மாநில அரசின் கருத்தை கேட்கும் வாய்ப்புள்ளது. மாநில அரசு, இந்த இடைத்தேர்தலை தவிர்க்கும் என்றே தெரிவதால், கடையநல்லூரில் இடைத் தேர்தல் நடத்த மத்திய அரசு விருப்பம் தெரிவிக்காது.

விரும்பாது மாநில அரசு
இடைத்தேர்தலுக்காக அமைச்சர்களை குவிப்பது, தேர்தல் நடத்த விதிமுறை அமல் போன்றவற்றால், நெல்லை மாவட்டத்தில், அரசால் புதிய திட்டங்களை அறிவிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். பொதுத்தேர்தல் நெருங்கும் நேரத்தில், இந்த ரிஸ்க் வேண்டாம் என்றே மாநில அரசு கருதும் என்பதால் கடையநல்லூரில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications