இனி, கண் தானத்திற்கும் 108 ஆம்புலன்சை அழைக்கலாம்...!
சென்னை: கண் தானம் செய்வதற்கும் அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையைப் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண் தானம் தொடர்பான இருவார விழிப்புணர்வு விழா அக்டோபர் 25 முதல் செட்பம்பர் 8ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை எழும்பூர் அரச கண் மருத்துவமனை சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
அப்போது அம்மருத்துவமனை இயக்குநர் நமீதா புவனேஷ்வரி கூறியதாவது :-

வாக்கத்தான்...
பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு, கண் பரிசோதனை செய்து வருகிறோம். வரும் செப்டம்பர் 2ம் தேதி பாந்தியன் சாலையில் இருந்து மார்ஷல் சாலை வரை வாக்கத்தான் நடத்தப்பட உள்ளது.

சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு...
செப்டம்பர் 8ஆம் தேதி கண்தானம் செய்வோர், கண்தானம் பெற்றவர் குடும்பத்தினருடன் சந்திப்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண் தானத்திற்கு 108 சேவை மையத்தை அழைக்க அரசு வழிவகை செய்துள்ளது' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

2 மணி நேரத்திற்குள்...
இது தொடர்பாக அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை மைய நிர்வாக மேலாளர் பிரபுதாஸ் கூறுகையில், ‘இறந்த இரண்டு மணி நேரத்தில் கண் தானம் செய்ய வேண்டும். கண் தானம் செய்ய 108 சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம். அரசு அதற்கான வழிவகைகளை செய்துள்ளது.

குறித்த நேரத்தில்....
சேவை மையம் தமிழகத்தில் 69 அரச மற்றும் தனியார் கண் வங்கிகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. குறித்த நேரத்தில் கண் வங்கிகள் வந்து தானம் பெற்றுக்கொள்ளும்' எனத் தெரிவித்தார்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications