டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை... சக டி.எஸ்.பி. மகேஸ்வரியிடம் 9 மணிநேரம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை!
சேலம்: தலித் பெண் டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை குறித்து அவரது தோழியும் சக டி.எஸ்.பி.யுமான மகேஸ்வரியிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று 9 மணிநேரம் விசாரணை நடத்தினர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தை உலுக்கிய இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.

அதேபோல் விஷ்ணுபிரியா விசாரித்து வந்த தலித் பொறியாளர் கோகுல்ராஜ் கொலை வழக்கும் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. நாகஜோதி தலைமையிலான டீம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் வழக்கறிஞர் மாளவியாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேலத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர்.
அதேபோல் விஷ்ணுபிரியாவுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் அர்ச்சகரிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி இருந்தனர்.
இதைத்தொடர்ந்து விஷ்ணுபிரியாவின் தோழியும் அவரது தற்கொலைக்கு உயர் அதிகாரிகளின் நெருக்கடியே காரணம் என்றும் இதனால் என் பதவிக்கு ஆபத்து வந்தாலும் பரவாயில்லை என்று ஊடகங்களில் குமுறி கொட்டிய கீழக்கரை டி.எஸ்.பி. மகேஸ்வரியிடம் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
இதை ஏற்று சேலத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் டி.எஸ்.பி. மகேஸ்வரி ஆஜரானார். அவரிடம் பிற்பகல் 12 மணிமுதல் இரவு 9 மணிவரை சுமார் 9 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையை சி.பி. சி.ஐ.டி. போலீஸ் எஸ்.பி. நாகஜோதி, டி.எஸ்.பி. ராஜன் ஆகியோர் நடத்தினர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications