விஷ்ணுபிரியா தற்கொலை: கீழக்கரை டிஎஸ்பியைத் தொடர்ந்து அரவக்குறிச்சி டிஎஸ்பி-யிடம் விசாரணை
நாமக்கல்: திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை தொடர்பாக, அரவக்குறிச்சி டிஎஸ்பி கீதாஞ்சலியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பியாக பணி புரிந்து வந்தவர் விஷ்ணுபிரியா. இவர் கடந்த மாதம் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த விஷ்ணுபிரியா, உயரதிகாரிகளின் நெருக்கடி காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலைக்கு முன்னர் விஷ்ணுபிரியா யாருடன் செல்போனில் பேசினார் என்பது குறித்து அவரது செல்போன் எண்களை வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்போது, விஷ்ணுபிரியாவின் நெருங்கிய தோழி கீழக்கரை டிஎஸ்பி மகேஸ்வரி, மதுரை வக்கீல் மாளவியா, சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவில் குருக்கள் விஜயராகவன் ஆகியோர் விஷ்ணுபிரியாவிடம் செல்போனில் பேசியது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
அதேபோல், என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக திருச்செங்கோடு சப்-டிவிசனுக்கு உட்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் குலசேகரன், மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் டிஎஸ்பி அலுவலகத்தில் பணிபுரியும் 3 போலீசாரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
விஷ்ணுபிரியா தற்கொலை செய்த அன்று அவரது உடலை அறையில் இருந்து, இறக்கும் போது உடனிருந்த பெண் சப்-இன்ஸ் பெக்டர்கள் சந்திர கலா, நித்யா ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது அரவக்குறிச்சி டிஎஸ்பி கீதாஞ்சலி என்பவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
விஷ்ணுபிரியாவின் கடைசிக் கடிதத்தில் கீதாஞ்சலிக்கு ரூ. 4 ஆயிரம் கொடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில், கீதாஞ்சலியிடம் சிபிசிஐடி போலீஸ் சூப்பிரெண்டு நாகஜோதி மற்றும் போலீஸ் அதிகாரிகள் விசாரித்தனர். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கமாக கீதாஞ்சலி பதில் அளித்தார்.
விஷ்ணுபிரியாவிற்கும், எப்படி பழக்கம் ஏற்பட்டது? விஷ்ணுபிரியா மன உளச்சலில் இருந்தாரா? எதற்காக அவர் பணம் பெற்றார் போன்ற கேள்விகள் கீதாஞ்சலியிடம் கேட்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications