குமரியில் ஓகி புயல் பாதிப்பு இடங்களுக்கு போகாமல் போட்டோக்களை மட்டும் பார்வையிட்ட ஆய்வு குழு!
கன்னியாகுமரியில் ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நேரில் ஆய்வு செய்யாமல் வெறும் புகைப்படங்களை மத்திய குழு ஆய்வு செய்வது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை ஆய்வு செய்யாமல் வெறும் புகைப்படங்களை மத்திய ஆய்வுக் குழு ஆய்வு செய்து வரும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு பருவமழை கடந்த நவம்பர் மாதம் தொடங்கியது. முதல் நாளே அதிக அளவு மழை பெய்தது. பின் வங்கக் கடலில் ஓகி என்ற புயல் உருவானது.
இந்த புயல் தென் தமிழகத்தையும் கேரளாவின் ஒரு சில பகுதிகளையும் புரட்டி போட்டது. இந்த புயல் உருவானது தெரியாமல் மீன் பிடிக்க கடலுக்குள் சென்ற மீனவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் இதுவரை கரை சேரவில்லை. அவர்களின் கதி என்ன என்று தெரியாமல் உறவினர்கள் தவிக்கின்றனர்.

மத்திய அரசு ரூ.133 கோடி
ஓகி புயல் பாதிப்புகளுக்கு நிவாரணப் பணிகளுக்காக ரூ. 876 கோடி நிதி தேவைப்படுவதாக மத்திய அரசுக்கு மாநில அரசு கடிதம் எழுதியது. ஆனால் முதல் கட்டமாக ரூ. 133 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது.

மத்திய குழு ஆய்வு
ஓகி புயலால் 400 மீனவர்கள் காணவில்லை என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்நிலையில் மத்திய உள்துறை இணைச் செயலாளர் சஞ்சீவகுமார் ஜிந்தால் தலைமையிலான 4 போ் கொண்ட குழுவினா் சென்னை, திருவள்ளூா் உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்கின்றனா்.

4 பேர் ஆய்வு
இதே போன்று மற்றொரு 4 போ் கொண்ட குழுவானது ஓகி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கன்னியாகுமாி மாவட்டத்தில் ஆய்வு செய்கின்றது. கன்னியாகுமரியில் புகைப்பட கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள புயல் பாதிப்பு பகுதிகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். அவர்களிடம் 220 மீனவர்களை காணவில்லை என்று தமிழக குழுவினர் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். ஓகி புயல் பாதிப்பு குறித்த இடங்களுக்கு நேரில் செல்லாமல் புகைப்படங்களை பார்வையிடுவதன் மூலம் பாதிப்புகளை நீர்த்து போக செய்யும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

உண்மை நிலவரம் எப்போது?
ஓகி புயல் பாதிப்பு, மீனவர்களின் எண்ணிக்கை குறித்து உண்மை நிலவரத்தை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. இந்த நிலையில் நிதி ஒதுக்கீட்டை குறைத்து ஒதுக்குவதற்காக இதுபோல் புயல் பாதிப்புகளை மத்திய அரசும், தமிழக அரசும் மூடி மறைக்க பார்ப்பதாகவே கருதப்படுகிறது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications