வெள்ள பாதிப்பு ஆய்வு... ஜெயலலிதாவுடன் மத்திய குழு சந்திப்பு
சென்னை: தமிழகத்தில் வெள்ள பாதிப்புப் பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்ய சென்னை வந்துள்ள மத்திய குழு இன்று முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினர்.
முன்னதாக தலைமைச் செயலாளர் ஞானதேசிகனை அவர்கள் சந்தித்துப் பேசினர். முதல்வரைச் சந்தித்த பின்னர் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து வெள்ளம் பாதித்த பகுதிகளைக் குழுவினர் பார்வையிடவுள்ளனர்.
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதத்தைச் சீர் செய்ய ரூ. 8482 கோடி அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார். மேலும் மத்திய குழுவை அனுப்பி வைக்குமாறும் அவர் கோரியிருந்தார். இதையடுத்து முதல் கட்டமாக ரூ. 940 கோடியை விடுவித்த மத்திய அரசு மத்திய குழு ஒன்றையும் நியமித்தது.

அதன்படி மத்திய உள்துறை அமைச்சக இணை செயலாளர் டி.வி.எஸ்.என்.பிரசாத் தலைமையில் வேளாண் அமைச்சக கூடுதல் ஆணையர் ஒய்.ஆர்.மீனா, நிதி அமைச்சக இணை இயக்குனர் எம்.எம்.சச்தேவா, குடிநீர் அமைச்சக முதுநிலை ஆலோசகர் ஜார்கர், சென்னையில் உள்ள மத்திய குடிநீர் அமைச்சக மூத்த மண்டல இயக்குனர் ரோஷினி, எரிசக்தித்துறை உதவி இயக்குனர் சுமித் கோயல், ஊரக மேம்பாட்டு அமைச்சக இயக்குனர் வி.சி.பேரா, பெங்களூரூவில் இருக்கும் மத்திய நீர்வள அமைச்சக மேற்பார்வை பொறியாளர் என்.எம்.கிருஷ்ணன் உன்னி, சென்னையில் இருக்கும் சாலைப் போக்குவரத்து அமைச்சக மண்டல இயக்குனர் டி.எஸ்.அரவிந்த் ஆகியோர் கொண்ட மத்திய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு நேற்று இரவு சென்னை வந்து சேர்ந்தது. இன்று முற்பகல் அவர்கள் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினர். இதையடுத்து தங்களது ஆய்வுப் பயணத்தைத் தொடங்குகின்றனர்.
முன்னதாக இக்குழுவினர் தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் ஞானதேசிகனைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை இக்குழுவினர் பார்வையிடுவார்கள் என்று தெரிகிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications