தலைமை கணக்காளர் அருண் கோயலின் ஜாமீன் மனு தள்ளுபடி.. சிபிஐ நீதிமன்றம் அதிரடி!
தமிழக அரசின் தலைமை கணக்காளர் அருண் கோயலின் ஜாமீன் மனு சென்னை சிபிஐ நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சென்னை: தமிழக அரசின் தலைமை கணக்காளர் அருண் கோயலின் ஜாமீன் மனு சென்னை சிபிஐ நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
பொதுத்துறையில் கணக்காளர் பணி நியமனத்திற்கு 5 லட்சம் வாங்கியதாக அருண் கோயல் சென்ற வாரம் கைது செய்யப்பட்டார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஏஜி அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய சோதனையில் இவர் லஞ்சம் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

2015ம் ஆண்டு அருண் கோயல் தலைமை கணக்காளராக பொறுப்பேற்றுள்ளார். இவரால் நியமிக்கப்பட்ட ஒவ்வொருவரும் சுமார் 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை லஞ்சம் கொடுத்துள்ளனர். இவருடன் லஞ்சப்பணம் வாங்க உதவிய மற்றொரு அதிகாரி கஜேந்திரன், தமிழக அரசு ஊழியர் சிவலிங்கம், ராஜா உள்ளிட்ட 4 பேரை கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து கடந்த மார்ச் 24ம் தேதி இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இதை எதிர்த்து அருண் கோயல் உட்பட 4 பேரும் ஜாமீன் கேட்டு சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தார்கள்.
இவர்கள் மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டார்கள். அருண் கோயலுடன் ஜாமீன் கேட்ட 4 பேரின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதோடு 4 பேருக்கும் போலீஸ் காவலை ஏப்ரல் 20 வரை நீடித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications