மதுரை, தஞ்சையில் கனமழை... சென்னையில் சாரல் மழை
சென்னை புறநகரில் சாரல் மழை பெய்து வரும் நிலையில், மதுரை, தஞ்சையில் கனமழை கொட்டியது.
சென்னை: சென்னை மற்றும் புறநகரில் சாரல் மழை பெய்து வரும் நிலையில், மதுரை, தஞ்சையில் கனமழை கொட்டியது.
தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில் தமிழகத்தில் உள் மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.

மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது. மாலை 5 மணி முதல் பெய்து வரும் கனமழையால் மின்சாரம் தடைபட்டுள்ளது
திருப்பரங்குன்றம், திருநகர், பெருங்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை கொட்டியதால் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருகியுள்ளதால் காளவாசல் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் பல ஊர்களில் கனமழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் பல பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி, பட்டாபிராம், திருமுல்லைவாயில் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. திருவள்ளூருரில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்த நிலையில் இன்று பரவலாக மழை பெய்து வருகிறது.
-
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications