விடிஞ்சா தீபாவளி... தீவுத்திடலில் பட்டைய கிளப்பும் பட்டாசு விற்பனை!
தீபாவளிப் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
சென்னை: தீபாவளிப் பண்டிகையின் முக்கிய அம்சமான பட்டாசுகளை வாங்க சென்னை தீவுத்திடலில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
சென்னை பாரிமுனையில் செயல்பட்டு வந்த மொத்தவிலை பட்டாசுக் கடைகளுக்கு ஹைகோர்ட் தடை விதித்ததையடுத்து. கடந்த 8 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் விற்பனை சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தீவுத்திடலில் 40 க்கும மேற்பட்ட கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
10 நாட்களுக்கு முன்னரே கடைகள் இங்கு அமைக்கப்பட்டாலும் நாளை தீபாவளி கொண்டாடப்படுவதையொட்டி மக்கள் விறுவிறுப்பாக பட்டாசு கடைகளை நோக்கி படையெடுத்து வருகின்றன. புதிய ரக பட்டாசுகள், வானில் பல வண்ணங்களில் ஜொலிக்கும் வர்ணஜால பட்டாசுகள், ஃபேன்சி ரக பட்டாசுகள் விற்பனையில் வெளுத்து வாங்குகின்றன.

இறுதிக் கட்ட விற்பனை
விடியற்காலையில் கொண்டாடப்படும் தீபாவளியை முன்னிட்டு இன்று இரவு முழுவதும் பட்டாசு விற்பனை இங்கு நடைபெறும். இதே போன்று நாளையும் தீபாவளிக்கு மறுநாள் வரையிலும் பட்டாசு விற்பனை நடைபெறும் என்று விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விலை எவ்வளவு?
கடந்த ஆண்டு ஜிஎஸ்டி வரி இல்லாவிட்டாலும் பட்டாசுகளுக்கு மறைமுக வரிகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதால் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

புதிய ரக பட்டாசுகள்
தீபாவளிக்கு புது ரகங்களையே அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். வழக்கமான லட்சுமி வெடி, ஊசிப்பட்டாசு போன்ற ரகங்களும் பல்வேறு மாறுதலுக்கு உள்ளாகி ஃபேன்சி ரக பட்டாசுகளாக சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளன. இரவு நேரங்களில், வானத்தில் வர்ணஜாலம் காட்டும் ரகங்கள் ஆண்டுதோறும் புதிது, புதிதாக அறிமுகப்படுத்தப்படுகின்றன. இந்த ஆண்டும் 60 திய பட்டாசு ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

விறுவிறு விற்பனை
மேலும் கிப்ட் பாக்ஸ் ரகங்களும் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் கூறுகின்றனர். கிப்ட் பாக்ஸ் ரகங்கள் ரூ. 1000 முதல் ரூ.10 ஆயிரம், ரூ. 20 ஆயிரம் வரையிலும் கூட கிடைக்கின்றன.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications