போராட்டத்தில் குதித்த சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் - முதல்வர் இல்லம் முற்றுகை!
Recommended Video

சென்னை: தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டதை கண்டித்தும், கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரியும் சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் கடந்த 20ம் தேதி முதல் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இந்த திடீர் கட்டண உயர்வால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பிற மாநிலங்களைக் காட்டிலும், உயர்விற்கு பின்பும் தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் குறைவு என்றும், வேறு வழி இல்லாமல் கட்டணம் உயர்தப்பட்டதாகவும் அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பொதுமக்கள் இதனை ஏற்க தயாராக இல்லை. இதுகுறித்து அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் மற்றும் மாணவர்கள் எப தமிழகம் முழுவதும் மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களும் இன்று போராட்டத்தில் குதித்து உள்ளனர்.
கட்டண உயர்வைக் கண்டித்தும், உடனே அதை திரும்பப் பெறக்கோரியும் சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் பிராட்வே பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இதனிடையே சென்னை கிரீன்வேஸ் சாலையில் முதல்வர் எடப்பாடியார் இல்லத்தை முற்றுகையிடவும் மாணவர்கள் முயற்சித்தனர். இதனை தடுத்து சிலரை போலீசார் கைது செய்தனர்.
அதுபோல பல இடங்களில் அரசியல் கட்சிகளும், கல்லூரி மாணவர்களும் தொடர்ந்து போராடி வருவதால் தமிழகத்தில் கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. ஆனால், இதுகுறித்து அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மெளனம் காத்து வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications