10,000 கோடி திட்டம்.. 5 மாவட்ட விளைநிலங்களை அழித்து.. சென்னை -சேலம் 8 வழிச்சாலை!
சென்னை: சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டமானது ரூ.10,000 கோடி மதிப்பிலானது ஆகும்.
சென்னையிலிருந்து சேலத்துக்கு 3 மணி நேரத்தில் செல்லும் வகையில் 8 வழிச்சாலை திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு தமிழக எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எனினும் இந்த திட்டத்தால் தொழிற்சாலைகள் பெருகும் , வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று ஆளும் கட்சி கூறி வந்தது. இதனிடையே விவசாயிகளின் விருப்பத்துக்கு மாறாக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
அதற்காக நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு கல்லும் நடப்பட்டது. இந்த திட்டத்தை விவசாயிகள் எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் , பவானி சுப்புராமன் அமர்வு விசாரித்தது.
அப்போது நிலம் எடுக்க தடை விதித்தது. இந்த திட்டம் சேலத்திலிருந்து தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை , காஞ்சி மாவட்டங்கள் வழியாக 8 வழிச்சாலை திட்டத்தை அமல்படுத்த திட்டமிடப்பட்டது.
இந்த திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. தற்போது உள்ள சாலையின் படி சென்னையிலிருந்து சேலத்துக்கு செல்ல 274.300 கி.மீ .தூரம் உள்ளது. ஆனால் இந்த பசுமை வழிச்சாலை திட்டத்தால் 250.300 கி.மீ. தூரமே இருக்கும் என்று தமிழக அரசின் கருத்தாக இருந்தது. இதனால் பயண தூரம் மிச்சப்படுத்தப்படும் என்று கூறப்பட்டது.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications