இரவு பகலாக படித்தேன்... 10ம் வகுப்பில் 3வது இடம்பிடித்த சென்னை மாணவி
சென்னை: சென்னை டவுட்டன் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜாஷ்னவி 500க்கு 497 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 3-வது இடம் பிடித்துள்ளார். டாக்டராவதே தனது லட்சியம் என மாணவி விருப்பம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி எனப்படும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் மாநில அளவில் 499 மதிப்பெண் எடுத்து முதல் இடத்தினை இரண்டு பேர் பகிர்ந்து கொண்டனர். 498 மதிப்பெண் எடுத்து இரண்டாம் இடத்தினை 50 பேர் பிடித்தனர். 497 மதிப்பெண் பெற்று 224 பேர் மூன்றாம் இடத்தித்தை பிடித்தனர்.
சென்னை டவுட்டன் மகளிர் மேல்லைப்பள்ளி மாணவி ஜாஷ்னவி, மாநில அளவில் 497 பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.
அவர் பெற்ற மதிப்பெண்கள்:
தமிழ் - 98
ஆங்கிலம் - 99
கணிதம் - 100
அறிவியல் - 100
சமூக அறிவியல் - 100
மாணவி ஜாஷ்னவி கொடுங்கையூர் மகாகவிபாரதியார் நகரை சேர்ந்தவர். மாணவியின் தந்தை ஸ்ரீதர்குமார் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தாய் ரமாதேவி. சாதனை குறித்து மாணவி ஜாஷ்னவி கூறுகையில்,
பத்தம் வகுப்பு பொதுத் தேர்வில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்தேன். இதற்காக ஒரு வருடமாக இரவு, பகல் என பாராமல், தூக்கமில்லாமல் படித்தேன். படிக்க வேண்டும் என நினைத்தால் எந்த நேரத்திலும் எழுந்து படிப்பேன். இவ்வளவு கடினமாக முயற்றி மேற்கொண்டதனால் இந்த சாதனையை எட்ட முடிந்தது.
தனது வெற்றிக்கு காரணமாக இருந்த பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி. டாக்டர் ஆவதே என் லட்சியம். இதற்காக வரும் காலங்களில் இன்னும் கடுமையாக உழைப்பேன் என்று ஜஷனவி கூறினார்.
-
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா?












Click it and Unblock the Notifications