இரவு பகலாக படித்தேன்... 10ம் வகுப்பில் 3வது இடம்பிடித்த சென்னை மாணவி
சென்னை: சென்னை டவுட்டன் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜாஷ்னவி 500க்கு 497 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 3-வது இடம் பிடித்துள்ளார். டாக்டராவதே தனது லட்சியம் என மாணவி விருப்பம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி எனப்படும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் மாநில அளவில் 499 மதிப்பெண் எடுத்து முதல் இடத்தினை இரண்டு பேர் பகிர்ந்து கொண்டனர். 498 மதிப்பெண் எடுத்து இரண்டாம் இடத்தினை 50 பேர் பிடித்தனர். 497 மதிப்பெண் பெற்று 224 பேர் மூன்றாம் இடத்தித்தை பிடித்தனர்.
சென்னை டவுட்டன் மகளிர் மேல்லைப்பள்ளி மாணவி ஜாஷ்னவி, மாநில அளவில் 497 பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.
அவர் பெற்ற மதிப்பெண்கள்:
தமிழ் - 98
ஆங்கிலம் - 99
கணிதம் - 100
அறிவியல் - 100
சமூக அறிவியல் - 100
மாணவி ஜாஷ்னவி கொடுங்கையூர் மகாகவிபாரதியார் நகரை சேர்ந்தவர். மாணவியின் தந்தை ஸ்ரீதர்குமார் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தாய் ரமாதேவி. சாதனை குறித்து மாணவி ஜாஷ்னவி கூறுகையில்,
பத்தம் வகுப்பு பொதுத் தேர்வில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்தேன். இதற்காக ஒரு வருடமாக இரவு, பகல் என பாராமல், தூக்கமில்லாமல் படித்தேன். படிக்க வேண்டும் என நினைத்தால் எந்த நேரத்திலும் எழுந்து படிப்பேன். இவ்வளவு கடினமாக முயற்றி மேற்கொண்டதனால் இந்த சாதனையை எட்ட முடிந்தது.
தனது வெற்றிக்கு காரணமாக இருந்த பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி. டாக்டர் ஆவதே என் லட்சியம். இதற்காக வரும் காலங்களில் இன்னும் கடுமையாக உழைப்பேன் என்று ஜஷனவி கூறினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications