அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை உள்ளாட்சி தேர்தல் இல்லை... உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்
தமிழக உள்ளாட்சி தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நடத்த வாய்ப்பில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் தொகுதி மறுவரையறை நடத்தி முடித்த பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் அப்பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் முடிவடையும் என்றும் தெரிவித்துள்ளது.
உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் கடந்த ஆண்டு முடிவடைந்த நிலையில் இதுவரை உள்ளாட்சி தேர்தல் நடத்தவில்லை. உள்ளாட்சி நிர்வாகம் முடங்கி கிடப்பதால் தேர்தலை 15 நாள்களுக்கு நடத்தி முடிக்க வேண்டும் என்று கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் உச்சநீதிமன்றத்தில் கே.கே.ரமேஷ் பொது நல வழக்கை தொடுத்துள்ளார்.

இதனிடையே உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுகவும் ஒரு வழக்கை தொடுத்துள்ளது. ரமேஷ் தொடுத்த வழக்கு திமுகவின் வழக்குடன் சேர்க்கப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசும், மாநில தேர்தல்ஆணையமும் முன்வைத்த வாதத்தில் கூறுகையில் 2011-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பை வைத்து தொகுதி மறுவரையறை பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிவடையும். அதன் பின்னர் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிக்கைகள் தயார் செய்வதற்கு பிப்ரவரி மாதம் ஆகும். எனவே 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி வரை உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications