சேஷசமுத்திரம் மோதல்... காயமடைந்த அரசு ஊழியர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதி.. ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை : விழுப்புரம் மாவட்டம் சேஷசமுத்திரம் கிராமத்தில் நடந்த மோதல் சம்பவத்தில் காயமடைந்த காவலர்கள்-கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, திங்கள்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது...

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம் சேஷசமுத்திரம் கிராமத்தில் தேர் திருவிழா தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. அப்போது, சிலர் வன்முறை செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை தடுத்த காவல் துறையினர்-வருவாய்த் துறையைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில், சங்கராபுரம் உதவி ஆய்வாளர் குழந்தைவேலு, முதல்நிலைக் காவலர்கள் பாலமுருகன், ராஜன்பாபு, சரவணன், ஆயுதப் படை காவலர்கள் ரஞ்சித்குமார், பரவேஸ்வர பத்மநாபன், யுவராஜ், சரவணன், கிராம உதவியாளர்கள் செல்வம், பாலுசாமி, கணேசன் ஆகியோர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.50 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு தனது அறிவிப்பில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications