தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற ஸ்டிரைக்
புதிய ரூ2,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி வழங்காததை கண்டித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்
திண்டுக்கல்: தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். இதனால் கூட்டுறவு வங்கிச் சேவை முடங்கும் சூழல் உருவாகியுள்ளது.
கருப்பு பணம் மற்றும் கள்ளப் பணத்தை ஒழிப்பதற்காக புழக்கத்தில் உள்ள ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த 8ந் தேதி அறிவித்தார். பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளிலும், தபால் நிலையங்களிலும் கொடுத்து டிசம்பர் 30ந் தேதி வரை மாற்றிக்கொள்ளலாம் எனவும் அறிவித்தார்.

இதனால் வங்கிகள், தபால் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகின்றது. இதனால், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் பொதுமக்களின் பழைய நோட்டுகளை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு போதிய நிதி வழங்காததாலும், அடகு வைத்த நகைகளை மீட்க வருபவர்களுக்கு பணப்பட்டுவாடா வழங்கமுடியாத நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர்களின் செயற்குழு கூட்டம் திண்டுக்கல்லில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அச்சங்கத் தலைவர் முத்துபாண்டி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற நிறுத்தத்தில்
ஈடுபடபோவதாக தெரிவித்தார். வேலை நிறுத்தப் போராட்டத்தில் 3,50,000 ஊழியர்கள் பங்கேற்க உள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் பொதுமக்களிடம் பழைய ரூபாய் நோட்டுகளை வாங்க அனுமதி வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications